Please watch: "திருநெடுங்களம் (மறையுடையாய்...) Maraiyudaiyai, Thirumurai 1-52 "
• மறையுடையாய்...Full Mea... -~-
Thirumurai 1-001_1 to 10 songs from Unknown. More details here: thevaramclass.b...
1.1 தோடுடைய செவியன் Thodudaiya Seviyan Gnanasambanthar Song.
திருவருள் பெற, நல்ல மக்கட்பேறு பெறுவதற்கு, குழந்தைகள் நல்லறிவுடன் திகழ, ஞானக்குழந்தையை பெறுவதற்கு குருவருள் பெறுவதற்கு இதனை அன்பர்கள் அன்றாடம் ஓதி அளவற்ற பலன்களைப் பெறலாம்.
சோழநாட்டு சீர்காழியில் தவம்பெருகும் கவுணியர் குலத்தில், சிவதீக்கை பெற்ற வேதியர் குலத்தில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் சித்திரை மாதத்தில் திருவாதிரைத் திருநாளிலே வேதநெறியும், சைவமும், தமிழும் தழைத்தோங்க ஒரு குழந்தை அவதரித்தது. ஒருநாள் சிவபாத இருதயர் சீர்காழிக்கோயிலின் பிரம தீர்த்தத்தில் நீராடச்செல்ல, உடன் சென்ற குழந்தையை குளக்கரையில் அமர வைத்து, நீருள்மூழ்கி “அகமர்ஷணம்” என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். தந்தையைக் காணாத குழந்தையும் திருத்தோணிபுர சிகரத்தை பார்த்து, “அம்மே! அப்பா!” என அழ, அவர்க்கருள்புரிய சிவபெருமான் அம்மையுடன் எருதின்மேல் எழுந்தருளி, அம்மையிடம் “பால் அடிசில் ஊட்டுக” என ஆணைதர, அவ்வண்ணமே அம்மையும் பொற்கிண்ணத்தில் சிவஞான இன்னமுதம் குழைத்து “உண் அடிசில்” என ஊட்டி கண்ணீரைத் துடைத்தார். இங்ஙனம் அருள் பெற்ற மண்ணின்வளர் மரிக்கொழுந்து, ஞானத்தின் திருவுரு, நான்மறையின் விழுப்பொருளாம் புகலிவேந்தர், ஆளுடைய பிள்ளையார் எனவும், திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப்பெற்றார். செபம் முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடைவாய் வழிந்து இருக்கின்ற பாலைக்கண்டு “நீ யார் தந்த பாலை உண்டாய்? உனக்கிது இட்டாரைக் காட்டு” என்று சிறுகோல் கொண்டு அதட்டிட, சம்பந்தர் ஆனந்தக்கண்ணீர் துளிக்க வலக்கையை மேலுயர்த்தி, விடையின் மீது பரங்கருணையின் வடிவான பராசத்தியோடு உடனின்ற சிவபெருமானை சுட்டிக்காட்டி, உள்ளம் நிறைந்து வழிந்த உயர்ஞானத் திருமொழியால் முதன்முதலில் இத்திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.
பன்னிரு திருமுறைகளிலுள்ள பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் முதல் பாடல் இஃது. சண்பைநகர் காவலர் அருளிச்செய்த இப்பதிகத்தை பாராயணம் செய்வோர், முத்தமிழ் வித்தகராம் திருஞானசம்பந்தரின் குருவருளினாலே ஞானமுள்ள குழந்தையை பெறுவர். ஞானம் சிறக்கவும், நல்லறிவும், நற்சிந்தனையும் பெற இப்பதிகம் உதவும். மெய்மைமொழி திருப்பதிகமாகிய இதனை அன்பர்கள் அன்றாடம் ஓதி அளவற்ற பலன்களைப் பெறலாம்.
about saivam in tamil, devara thirumurai, devara thirumurai padalgal, learn thirumurai, nalvar thevaram, panniru thirumurai, thevaram lyrics in tamil, saivam tamil, sambandar thevaram, shaivam org thevaram, shaivam.org thevaram, shiva thevaram, thirumurai benefits, thirumurai devaram, thirumurai for healing, thirumurai for wealth, thirumurai list, thirumurai lyrics, thirumurai meaning, thirumurai padalgal, thirumurai pathigam, thirumurai song, thirumurai tamil song, thirumurai thevaram, thirumurai training, thirumurai video, thirumurai vinnappam, thirumuraigal, thevaram thirumurai songs lyrics, thirumurai english, thirumurai for child.
Негізгі бет 1.1 தோடுடைய செவியன் Thodudaiya Seviyan Gnanasambanthar Song
Пікірлер: 2