1.எந்த மலை சேவித்தாலும்... 2. பச்சை பட்டாடை..| ஆயிக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2022 |
ச்லோகம்:
ஒன்றும் அறியாது இருப்பதுவும்
நியாயமோ ஐயனே ஐயப்பா
உனது மனம் என்ன கல்லோ
ஒரு மாதினிற்காக நீ உலகினில்
மெய்ப்பொருள் அழைப்பதில் பொய்யதாமோ
மழலையோ நொண்டியோ ஊமையோ
ஆகிலும் நீ மைந்தரை தள்ளலாமோ
கான லலிதேஸ்வரியின்மகிழ் பர்த்தனே
கருணை மாறாத நிதியே நிதி தந்து அருளும்
இது ஸமயம் உன்னுடைய மந்திரம் நான்
மனம் உவந்து செய்த பூஜை எல்லாம்
இந்த உலகினில் பொய்யென்று சொல்வது
சத்தியமோ ஐயப்பா..
மண்டலம் புகழும் சபரிகிரிதனில்
தக தகவென ஜொலிக்க பவனி வருகிறாரே
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரம வித்தான
மெய்ஞஞான குருவே நீ வருவாய் அருள் தருவாய்
ஐயனே ஐயப்பா
பாடல்:
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமலாங்கன் வாழும் மலை
ஆரியங்காவினிலே அச்சன் கோவிலினிலே
ஏரிமேலிதனிலே பந்தளம்தனிலே
குளத்துப்புழை தனிலே பம்பாநதி தனிலே
நீலிமலை காந்தமலை (எந்த மலை )
கோடி சூரியன் உதிக்கும் மலை-எங்கள்
கோமலாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் அய்யன் வாழும் மலை ( எந்த )
பாரில் உள்ளோர் எல்லாம் புகழும் மலை
பக்தி பரவசத்தை கொடுக்கும் மலை
ஸகல பாவ வினைகளை தீர்க்கும் மலை
எங்கள் பம்பா பாலன் வாழும் மலை
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை பாடினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்
2. பச்சை பட்டாடை கட்டி
பரியின் மேல் ஏறி வரும்
பச்சை குழந்தை இவர் யாரய்யா
பார்த்தவர்கள் மயங்குவதை பாரய்யா
இவர் யாரய்யா என்ன பேரய்யா.
.
கோடி சூர்யன் போல் முகமும்
புன்னைகையுடன் கருணை விழியும்
வீரதிலகமுடன் வருகின்றான்
பாலன் இவன் யாரென்று கேளய்யா
மாலனோ இல்லை சோமனோ
மால்மருகனோ என்று பாரய்யா (பச்சை)
இந்திரன் குடை பிடிக்க
சந்திர சூரியன் சாமரம் போட
மந்தஹாஸத்துடனே வருகின்றான்
பார்த்தவர்கள் மயங்குவதை பாரய்யா
பூலோகமோ தேவலோகமோ
பூமாரியே பொழிவதை பாரய்யா (பச்சை)
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
• 180 - Endha Malai Sevi...
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
---------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Endha Malai Sevithalum - Ayyapa Dhyanam - Namasankeerthanam by Ayikudi Sri Kumar Bhagavathar
Website - www.sriradhakalyanam.org
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
KZitem Channel - / rkraman
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam #Namsankirtan #Radhakalyanam #AlangudiNamasankeerthanaTrust #bhajan #gurusthalam #Bhagavathar #Bagavathar #namaprachar #bajan #ayikudi #KumarBhagavathar #AKB
Негізгі бет Музыка 180 - Endha Malai Sevithalum | Ayikudi Sri Kumar Bhagavathar | Alangudi Radhakalyanam 2022
Пікірлер: 4