Tuned and Sung by -
Nikila Shyam Sunder.
Song Written by Sri. Srini. G. S
I have tuned in the Ragam Manolayam and Adi Talam
அம்மா தேவி லலிதாம்பிகே
அகிலம் போற்றும்
ஜகதாம்பிகே
அருள் தருமே உன்
ஸ்ரீ சக்கரம்
வரம் தருமே உன்
நேசக்கரம்(அம்மா)
சுடரொளியாய் ஒரு
புதுப்புனலாய்
மழைத்துளியாய் எரி
செங்கனலாய்
ஒவ்வொரு நாளும்
ஒரு வடிவாய்
அன்னையின் உருவம்
புதுப் பொலிவாய்(அம்மா)
கமலத் தாமரை
இதழ் விரிய
விரிந்திட விரிந்திட
விழி விரிய
ஒவ்வொரு இதழும்
ஒரு கோணம்
அங்கு உள்ளே தெரிவது
அறுகோணம்
மத்தியிலே ஒரு
மொட்டிருக்கும்
அதில் சக்தியின் பீட
வடிவிருக்கும்(அம்மா)
மந்திரமோ அது எந்திரமோ
எந்திரமோ இதில்
தந்திரமோ
அறுபத்தி நான்கு
வடிவாக
அனைவர்க்கும் நல்ல
வாழ்வாக
அருள் தருமே உன்
ஸ்ரீ சக்கரம்
வரம் தருமே உன்
நேசக்கரம்
(அம்மா)
Негізгі бет 294.Amma Devi Lalithambike / அம்மா தேவி லலிதாம்பிகே
Пікірлер: 10