Praise the Lord
Good Morning
கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது.
உன் இளவயதில் உன்னோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
எசேக்கியேல் 16:60
சர்வ வல்லமை உள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தர் எசேக்கியல் தீர்க்கதரிசி மூலமாக; உன் இளவயதில் உன்னோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். அப்போது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வாய் என்று சொல் என்று, நமக்குச் சொல்லி இருக்கிறார். ஆம், கர்த்தருக்கு பிரியமானவர்களே,
நம் தேவனாகிய கர்த்தர் உடன்படிக்கையின் தேவன், தான் செய்த உடன்படிக்கையை நினைவு கூருகிற தேவன். தேவன் நோவாவோடு உடன்படிக்கை செய்தார். தேவன் தன்னோடு உடன்படிக்கை செய்தபடியால், அவர் சொன்னபடியே நோவா பேழையை செய்து அதற்குள் நுழைந்தார். தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்ததால் பேழையை விட்டு வெளியே வந்த நோவாவையும், அவர் குமாரனையும் நோக்கி, நீங்கள் பலகிப் பெருகி, பூமியிலே திரளாய்வர்த்தித்து விருத்தியாகுங்கள், நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நான் என் வில்லை, மேகத்தில் வைத்தேன். அது எனக்கும் பூமிக்கும்,
உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாய் இருக்கும். நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு, அதை நோக்கி பார்ப்பேன் என்றார். அந்த உடன்படிக்கையின்படியே ஆபிரகாமை தெரிந்து கொண்டார். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார். ஈசாக்கோடு உடன்படிக்கை செய்தார். யாக்கோபோடு உடன்படிக்கை செய்தார். இவர்களோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து தன்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலை கேட்டு, மோசேயை அழைத்து,
அடிமையாய் இருந்த தன்னுடைய ஜனங்களை, தான் உடன்படிக்கை செய்த, தான் வாக்குகொடுத்த கானான் தேசத்துக்கு நடத்தி வர செய்தார். யோசுவாவோடு உடன்படிக்கை செய்தார் நெகேமியாவோடு உடன்படிக்கை செய்தார். உன் வம்சத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள் என்று, தான் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணி ராஜாவாக்கினார். தாவீதோடு நித்திய உடன்படிக்கை செய்தார்.
அந்த நித்திய உடன்படிக்கையின்படி தன்னுடைய குமாரனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பினார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நம்முடைய பாவங்களுக்காக தன்னுடைய இரத்தத்தை சிந்தி நம்மோடு உடன்படிக்கை செய்தார்.
ஆதலால் தான் மோசே; உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்என்றார். எனவே,
நான் யாக்கோபோடே பண்ணின, என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின,
என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன். நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன், என்ற கர்த்தருடைய வார்த்தைகளை
நாம் நினைவு கூர்ந்து, அவரோடு உடன்படிக்கை செய்து அவரோடு செய்த உடன்படிக்கையின் படி,
நாம் அவருக்கு பிரியமாய் அவருக்குப் பயந்து வாழும் போது அவர் நம்மோடு செய்த உடன்படிக்கையை நினைத்து நிச்சயம் நமக்கு நன்மையான காரியங்களை செய்து, நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென்
சர்வ வல்லமை உள்ள
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, என்று ஜெபித்த நெகேமியாவின் ஜெபத்தை கேட்டு நெகேமியாவோடு உடன்படிக்கை செய்து அதை நினைத்து நிறைவேற்றின கர்த்தாவே,
நீர் எங்கள் பிதாக்களோடும் எங்களோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, அந்த உடன்படிக்கையின் படி, நாங்கள் நடக்கவும், நீர் எங்களை ஆசீர்வதிக்கவும் வேண்டும் என நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இந்த நாளை நீர் எங்களுக்கு கொடுத்தற்காய் நன்றி,
இந்த நாளிலும் பிறந்த நாள் திருமண நாள் காண்கிறவர்களை ஆசீர்வதிக்கும் படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த நாளிலும் தேவையோடு விண்ணப்பத்தோடு கண்ணீரோடு வேண்டுதலோடு காத்திருக்கிறவர்களோடு செய்த உடன்படிக்கைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்மையான ஈவுகளை தர வேண்டும் என இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென்.
Негізгі бет 30.08.2024, கர்த்தர் நம்மோடுபண்ணின உடன்படிக்கையை நினைத்து நித்தியஉடன்படிக்கையை நமக்கு ஏற்படுத்துவார்
Пікірлер: 4