"ஸ்ரீ அகத்தியர்" அருளிய "அதிசக்தி வாய்ந்த" / "ஆதித்ய ஹ்ருதயம்"/ "Aditya Hrudayam" by "Sri Agathyar"
"ஆதித்ய ஹ்ருதயம்":-
போரினில் களைப்பினாலே
சோர்வினில் ஸ்ரீ ராமனே
நேரிலே ராவணன் நின்றான் போரினை தொடர் செய்யவே
தேவர்கள் சூழ்ந்திட அங்கே
போரினை காணவே வந்த
மாமுனி அகத்தியர் அவரும்
ராமனின் அருகில் உரைத்தார்
ராமா ராமா மகாவீரா
கேளாய் சொல்வேன் ரகசியம்
போரினில் பகையை வென்று
சேர்ந்திடும் வெற்றி நிச்சயம்
ஆதித்ய இதயம் என்னும்
பகையளிக்கும் மந்திரம்
ஓதினால் இதை தினந்தோறும்
ஒப்பிலா வெற்றியை தரும்
மாறாத மங்களம் தருவான்
தீரா பாவம் தீர்த்திடுவான்
சோகம் தீர்க்கும் சூர்யதேவன்
ஆயுளையும் வளர்த்திடுவான்
தேவாசுரர் பனிந்து ஏற்றும்
தேவன் சமத்துவ நாயகன்
பேரொளியாய் கிரணம்கொண்டு
பாராளும் பாஸ்கரன்
தேவர்கள் ஆற்றல்தன்னை
காட்டிடும் தேஜஸ்வரன்
தேவாசுரர் குலம்தன்னை
காத்திடும் ஒளிக்கீற்றவன்
ஈசன் விஷ்ணு ப்ரம்மா
கந்தன் ப்ரஜாபதி குருவும் அவன்
காலன் இந்திரன் வருணன் தேவன்
சோமன் தன நாயகன்
வசுசாத்யா மனுக்கெல்லாம்
அவனே ஆதியானவன்
வீசும் காற்றும் தீயும் அவனே
பருவங்கள் செய்கின்றவன்
ஆற்றலை அருளும் கிரணன்
அதிதி மைந்தன் முதற்கோளன்
கீற்றற பொன்னொளி வீசி
காலை பொழுதை தருகின்றவன்
பரியேளும் பரிதியின் ஒளியாய்
விரியும் பலசங்கிரணமாய்
புற அக இருளை நீக்கும்
பறவையாம் ஒளியானவன்
குளிரை கருவில் எரியச் செய்து
ஒளியாய் விண்ணில் அளிப்பவன்
அதிதி மைந்தன் ஒலிக்கும் சங்கு
அதிலே விழிப்பு அளிப்பவன்
இருளை மறைக்கும் வானநாதன்
மறைமூன்றின் சாதகன்
மலைதாண்டி விரையும் வேகன்
மழைதருவோன் நீர்சினேகிதன்
ஒளிவட்ட சன்னிரத்தோன்
அதனுள் யாவும் எரிப்பவன்
கவியானோன் சகத்திற்கெல்லாம்
விழிப்பினை தருகின்றவன்
நட்சத்திரம் கோள்களுக்கு எல்லாம்
அவனே தலை நாயகன்
உச்ச ஆற்றல் மிகுந்து ஒளிர்வோன்
பன்னிரு ஆத்மனானவன்
கிழக்கு மலையில் எழுபவா போற்றி
மேற்கிலே மறைபவா போற்றி
நாளின் நாயகா போற்றி
கோளின் கோவே போற்றி
ஆயிரம் கிரனோன் போற்றி
ஆதித்ய தேவனே போற்றி
செந்நிற மங்கலன் போற்றி
வென்றிடும் தேவனே போற்றி
வீரியனே உக்ரனே போற்றி
வண்ணமய தேகனே போற்றி
மலர்ந்திட செய்பவா போற்றி
மார்த்தாண்டனே போற்றி போற்றி
மும்மூர்த்தியின் தேவா
மிளிர்கின்ற ஆதித்யனே
ரௌத்திரமாய் உருவம் கொண்டு
ஒளிர்பவா போற்றி போற்றி
அஞ்ஞானம் பகையையெல்லாம்
அழித்திடும் அருளே போற்றி
செய்நன்றி கொன்றார் அழிக்கும்
தெய்வீக ஒளியே போற்றி
செயல்களுக்கு எல்லாம் ஆற்றலாகும்
தங்கத்தீ போல் ஆனவன்
இருளை நீக்கும் அழகு ஒளியோன்
உலகின் சாட்சி ஆனவன்
ஆக்குவோன் அழிப்போன் அவனே
அகிலத்து உயிர்களை எல்லாம்
நீரினை ஒளியால் உண்டு
மாரியாய் பொழிகின்றவன்
உயிர்கள் எல்லாம் உறங்கும் போதும்
உறங்காது விழித்திருப்பவன்
அக்னிஹோத்திரர் அவர் நாடும்
அரும் பலன் தானவன்
வேத நெறிகள் வடிவம் ஆகி
அதன் பலனும் என்றானவன்
யாதொரு செயற்கும் அவனே
புவியில் ஆற்றலாகிறான்
அச்சம் துன்பம் வரும்போதும்
பேரிடர்கள் வரும் போதிலும்
நிச்சயம் கைவிட மாட்டான்
தன்பதம் துதிப்போர்களை
ஆதித்ய இதயம் இதனை
மும்முறை ஒருநாளிலே
ஓதினால் ஒருமனதாக
வெற்றிகள் வசமாகுமே
வென்றிடுவாய் விரைவில் நீ
ராவணனை ஸ்ரீராமனே
என்றுரைத்து அகத்தியரும்
வந்த வழி திரும்பினார்
சூரியன் ஸ்தோத்ரம் கேட்டு
வீர்யமுற்றான் ஸ்ரீராமனே
கருணை உள்ளம் கொண்டவன்
தன் கவலைகளை களைந்திட்டான்
கதிரவன் துதியைபாடி
மகிழ்ந்தான் ஸ்ரீராமனே
மும்முறை நீரைபருகி
தெம்புடன் வில் ஏந்தினான்
போர்செய்ய ராவணன் எதிரில்
வருவதை கண்ணுற்றவன்
வீரமாய் நிமிர்ந்தே நின்றான்
ராவணன் வதம் செய்யவே
ஸ்ரீராமன் முகம் கண்டு
பகலவன் உளம் குளிரவே
ராவணன் முடிவைக் காணும்
நேரம் வந்தது என்றான்.
Негізгі бет Музыка "அனைத்திலும் வெற்றி"அடையச் செய்யும்/"அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதய மந்திரம்"/உங்கள் அன்பன் குரலில்
Пікірлер: 30