பாடியவர்:ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
பாடல் : செவி வழிப் பாடல்
வாடா கண்ணா வாடா
ஓடி வாடா முத்தம் தாடா
வரமாட்டேன் என்று நீயும் சொல்லலாமோ துரையே
ஒடி வாடா கண்ணா வாடா (1)
முத்துச் சுட்டி அசைய
முகம் வேர்க்க மொழி சுழல
சித்தனை குட்டி போல் என்
செல்வமே ஒடி வாடா (வாடா கண்ணா)
பாலுஞ் சாதமும் ஊட்டுறேன்
தங்க தொட்டிலில் போட்டு ஆட்டுறேன்
தவப் பாதங்கள் நொந்துதோ என்
துரையே ஒடி வாடா
(வாடா கண்ணா)
கையிலே வெண்ணைய் சிந்தித்தோ கண்ணக் கமல முகம் வாடித்தோ
தொய்யா பட்டு நொஞ்சித்தோ என் துரையே ஒடி வாடா
வாடா கண்ணா வாடா
ஒடி வாடா முத்தம் தாடா
கட்ட கயிறில்லையே உன்னை அடிக்க மனம் வரலையே
கட்ட மாட்டேன் ஒரு நாளும் செல்வமே ஒடி வாடா
வாடா கண்ணா வாடா
ஒடி வாடா முத்தம் தாடா
வரமாட்டேன் என்று நீயும் சொல்லலாமோ
துரையே ஒடி வாடா
Негізгі бет ஆஷாட ஏகாதசி ஸ்பெஷல்
No video
Пікірлер: 1