இன்று கோவை மாவட்டத்தின் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் மாநில தலைவரும் தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார், அவருடன் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், கூட்டமைப்பின் மாநில பொருளாளர் Lion பி கே ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் ராம வெங்கடேசன், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் A பாலகிருஷ்ணன், கூட்டமைப்பின் மண்டல தலைவர் GM முகமது ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நல வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன, மேலும் கூட்டமைப்பின் மண்டல மாநாடு டிசம்பர் 22ஆம் தேதி நடத்துவது என உறுதி செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக கோவை மாவட்ட கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் தொழிலாளர் நலத்துறையின் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினரும், TKTMS மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவருமான குருஸ் முத்து பிரின்ஸ் கூட்டமைப்பின் கோவை மாவட்ட துணை தலைவராக மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம் மற்றும் கூட்டமைப்பின் மாநில தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவருமான பொன் குமார் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார், அதற்கான அறிவிப்பு ஆணையும் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Негізгі бет அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்
Пікірлер