பாடல் : அரனாரின் சிரகினிலே || ஆல்பம் : கடவுள் பக்தி || பாடியவர் : வீரமணிதாசன் || இசை : சிவபுராணம் D V ரமணி || இயற்றியவர் : முகிலன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்கள்
Song : Aranarin Sirasinile || Album : Kadavul Bakdhi || Singer : Veeramanidasan || Music : Sivapuranam D V Ramani || Lyrics : Mukilan || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Songs
பாடல்வரிகள் || LYRICS :
அரனாரின் சிரசினிலே அமர்ந்தவளே கங்கையம்மா
அகிலமே ஆளவந்தாய் அம்மாதாயே கங்கையம்மா
ஆதிசிவன் நெற்றிக்கண்ணை அழித்திடவே வந்தாயம்மா
பராமனோட சிரசினிலே பாம்புடனே அமர்ந்தாயம்மா
கங்கையம்மா தேவி நீ கண்ணதொற தாயீ
ஏழுகடல் சீமையெல்லாம் சூழவந்தாய் கங்கையம்மா
அம்மா ஆறுகுளங்களிலே அழகுநதி ஓடையிலே
ஏரிகுளங்களிலே எழுந்து விளையாடவந்தாய்
தாயே எல்லா உயிர்களுக்கும் தாகந்தணிக்கும் கங்கையம்மா
ஆடும்சடையோடு அம்மா ஆடுகிறத் தாயே
அம்மா வற்றாத பூமியிலே வளர்ந்துவிளையாட வந்தாய்
தாயே ஓசையிட்டு ஓடிவந்தாய் உலகினிலே கங்கையம்மா
பாசிப்பயிர் உன்னாலே வாடுதிங்கே தன்னாலே
எங்க கங்கை மாரியம்மா மங்கையரே வாருமம்மா
சிவனுடலோடு அம்மா சேர்ந்துநின்ற கங்கையம்மா
ஈ எறும்பு புல் பூண்டு எல்லாம் இறகிவனலால்
சாதி சனம் சந்ததிய தழைக்க வைக்கும் கங்கையம்மா
கங்கை குடமிறங்கி களித்தாடி வருபவளே
மண்ணு குடமிறங்கி மகிழ்ந்தாடி வருபவளே
ஆதிசிவனொடு அம்மா அருள்கொடுக்கும் கங்கையம்மா
காவேரி கொள்ளிடத்தில் கரைதிரண்டு வருபவளே
வைகைக்கரை நெறஞ்சு வந்து வளம் கொழிக்க செய்பவளே
காணமஞ்ச குங்குமத்த கறச்சுவரும் கங்கையம்மா
பூண்டுவெல்லம் எனம்பாத்து பூசையிட்டு பொங்கவெப்போம்
வேண்டிநின்றோம் அம்மா வரமருளும் கங்கையம்மா
Негізгі бет அரனாரின் சிரசினிலே || Aranaarin Sirasinile || Kadavul Bakthi || Veeramanidasan || Vijay Musicals
Пікірлер: 30