#dharmapuri #balatvdpi #arekulam#very Che thottam #vyavsay#jayalakshmi varmanam #krishnapuramதர்மபுரி மாவட்டம் அரியக்குளம் கிராமத்தில் சாலியா பேரீட்சை என்ற பெயரில் பேரீட்சை விவசாயத்தி்ல் அசத்தி வருகிறார் விவசாயி நிஜாமுதின்.நெல், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, என விவசாயிகள் வழக்கமான விவசாயம் செய்து வரும் நிலையில் மாற்று விவசாயமாக பேரீட்சை விவசாயம் செய்து மற்ற விவசாயிகளின் கவனத்தை பெற்றிருக்கிறார் விவசாயி நிஜாமுதின்.
பாலைவனத்தில் மட்டுமே விளையக்கூடியது என்றிருந்த நிலையை மாற்றி தர்மபுரியிலும் இங்குள்ள மண்ணிலும் இங்குள்ள பருவ நிலையிலும் பேரீட்சையை வெற்றி கரமாக சாகுபடி செய்திருக்கிறார்.
பேரீீட்டைசயில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் நனது தோட்டத்தில் ஆராய்ச்சி ரீதியில் 35 ரகங்கள் நடவு செய்திருந்தாலும் கூட அதிலும் தரமான ரகங்களை கண்டறிந்து தற்போது,நூர், பரி, அலூவி,கத்ராவி,கனீஜி,எலைட், போன்ற ஆறு ரகங்களை வெற்றிகரமான லாபகரமாக சாகுபடி செய்திருப்பதாகவும்,தனுக்கு சொந்தமான பதினொரு ஏக்கர் நிலத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திசு வளர்ப்பு முறையிலான பேரீட்சை கன்றுகளை நடவு செய்து வளர்த்து தற்போது பழம் அறுவடை செய்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார் நிஜாமுதின்
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பேரீட்சை மரங்களில் பூ பூக்க தொடங்கி, ஜீன்,ஜீலை மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு வந்து விடுவதாகவும் தெரிவி்க்கும் விவசாயி நிஜாமுதின், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா,கம்போடியா, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பேரீட்டை பழங்களை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டி வருவதாகவும், லாபகரமாக உள்ள இந்த விவசாயத்தை மற்ற விவசாயிகளும் செய்து பலன் பெறலாம் என ஆலோசனை வழங்குகிறார் விவசாயி நிஜாமுதின்.
Негізгі бет அரியகுளம் பேரிச்சை ஒரு ஏக்கருக்கு 7 லட்சம் வருமானம்
Пікірлер: 9