அருள்மிகு ஸ்ரீ கலியுக வரத பெருமாள் திருக்கோயிலில் 77 ஆம் ஆண்டு திருவிழா
கோவை மதுக்கரை ஏசிசி குவாரி காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கலியுக வரத பெருமாள் திருக்கோயிலில் 77 ஆம் ஆண்டு திருவிழா ஐந்து நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவானது, அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை பக்தர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடந்தது. புரட்டாசி மாதம் 23ஆம் நாள் அன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம் மற்றும் துவக்க விழா அபிஷேக ஆராதனை கருடழ்வார் சிறப்பு பூஜை நடைபெற்றது. புரட்டாசி மாதம் 24 ஆம் நாள் காலை 9 மணி அளவில் சங்க அபிஷேகம், மாலை 7 மணி அளவில் புஷ்பாஞ்சலி மகா தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை புரட்டாசி மாதம் 25ஆம் நாள் காலை 8 மணி அளவில் அபிஷேக ஆராதனை மற்றும் மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை 26ம் நாள் காலை எட்டு முப்பது மணி அளவில் திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரசாதம் வழங்குதல், மாலை நான்கு முப்பது மணி அளவில் மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கையுடன் கருட வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வலம் வருதல் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 27ஆம் நாள் காலை 9 மணியளவில் மகா அபிஷேக ஆராதனை மற்றும் மதிய 12:30 மணி அளவில் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சியுடன் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
இதில், ஸ்ரீ கலியுக வரத பெருமாள் ஆலய கமிட்டிகள் மற்றும் விழா கமிட்டிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.
Негізгі бет அருள்மிகு ஸ்ரீ கலியுக வரத பெருமாள் திருக்கோயிலில் 77 ஆம் ஆண்டு திருவிழா
Пікірлер