திருப்பூருக்கு வந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டு முன்னேறியவர்களின் எண்ணிக்கை ஏராளம். இங்குள்ள தொழில் துறையினர் வந்தோரை வாழ வைத்து அவர்களை வாழ்க்கையில் உயர்த்தி விடுவதை
வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருப்பூரில் வேலை செய்து அருகில் உள்ள கோவை, ஈரோடு, கோபி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் வீடு வைத்துக்கொண்டு வந்து செல்பவர்கள் அதிகம். அதேபோல் திருப்பூரிலேயே தங்கி வேலை செய்து
வாழ்பவர்களும் நிறைய உள்ளனர். பலர் பனியன் நிறுவனங்களில் உள்ள விடுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர்.
உங்களிடம் இந்திய குடிமகன் என்பதற்கான ஆதார், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பான் கார்டு,
ஸ்மார்ட் கார்டு, பேங்க் பாஸ்புக் இதுமாதிரி ஏதாவது ஒரு அடையாள சான்று கட்டாயம் தேவை. அதுமட்டுமல்ல உங்கள் மீது எவ்வித குற்ற வழக்கு, ஏதேனும் சட்ட
பிரச்சினை தொடர்பான போலீஸ் ஸ்டேஷன் விவகாரம் போன்ற விஷயங்கள் இருக்கக்கூடாது. அப்படிப்பட்டவங்களுக்கு திருப்பூரில் வேலை கிடைக்காது.
எந்த ஊர்ல இருந்தும் ரயில் அல்லது பஸ் மூலமாக திருப்பூர் வந்து சேரலாம். வந்தவுடன் உங்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏஜெண்டுகளோட ஆட்கள் உங்களை ஆசை வார்த்தை கூறி, நல்ல சம்பளம், தங்குமிடம் இலவசம்னு சொல்லி கூட்டிட்டுப் போக முயற்சி செய்வாங்க. கவனமாக இருங்க. நல்ல தரமான முறையில் வேலை வாங்கித் தரோம்ணு
சொல்லும் பல நிறுவனங்கள் இருந்தாலும், ஒரு சிலர் குறுக்கு வழியில் செயல்படுவதால் யாரை நம்புறது யாரை நம்பக்கூடாதுன்னு பிரச்சினை ஏற்படுது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர்
சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு, திருப்பூர் ரைசிங் சங்கம்,
காம்பாக்டிங் சங்கம், கம்ப்யூட்டர் எம்பிராய்டரி சங்கம்,
காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்கம், செக்கிங் சங்கம், பவர் டேபிள் சங்கம், பிரிண்டிங் சங்கம், செகண்ட்ஸ் துணி உரிமையாளர்கள் சங்கம், நூல் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு, இந்திய
தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் பிரிவு உட்பட இன்னும் பல தொழில் அமைப்புகள் திருப்பூரில் அலுவலகத்தோடு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு சங்கத்தில் நீங்கள் தொடர்பு கொண்டால் கூட
உங்களுக்கு உதவ ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
சங்கங்களை தொடர்பு கொள்வது எப்படி என்பதை
அடுத்தடுத்த வீடியோவில் போன் நம்பருடன்
தெரிவிக்கிறோம். நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். செய்திகள் தவறாமல் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.
ஓ.கே.. இனி திருப்பூரில் செய்யக்கூடாத முக்கிய விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
முதலாவதாக கடன் வேண்டாம். அதிலும் கந்து வட்டி, வார வட்டி, நாள் வட்டிக்கு போயிடாதீங்க. நீங்க வேலை செய்யிற கம்பெனியில் உங்களின் நேர்மையான
நியாயமான கோரிக்கைக்கு நிச்சயம் முன்பணம்
கிடைக்கும். அதை நீங்க உழைச்சு கடனை
அடைச்சுக்கலாம்.
ஆரம்பத்துல தேவையான பொருளை மட்டும்
வாங்குங்க, மிச்ச காசை பேங்க்ல சேமிச்ச வையுங்க. ஆடம்பரத்திற்காக பொருட்களை இ.எம்.ஐல வாங்கி
மாதமாதம் கடனை அடைக்க திணறாதீங்க. பக்கத்துல தெரிஞ்சவங்கன்னு நம்பி வாரச்சீட்டு, மாதச்சீட்டுன்னு போய் பிரச்சினைல மாட்டிக்காதீங்க. பேங்க், போஸ்ட் ஆபீஸ், தரமான பதிவு செய்யப்பட்ட சீட்டு கம்பெனின்னு போய்ட்டா பிரச்சினை வராது.
ஒரு வருஷம் அல்லது 2 வருஷம்னு ஒரு குறிக்கோள் வைச்சுகிட்டு இடம் வாங்குற முயற்சில கவனம் செலுத்துங்க. திருப்பூர் பனியன் கம்பெனில வேலை செஞ்சு கடுமையா உழைச்சு பெரிய ஆளா வந்தவங்க திருப்பூர்ல நிறைய பேர் இருக்காங்க. அவங்கள பார்த்து அதேமாதிரி நாமும் முன்னேறணும்னு நினைங்க.
வாடகை வீட்டுக்கு குறிப்பிட்ட நேரத்துல வாடகை
கொடுக்கப்பாருங்க. ஏன்னா பல இடங்கள்ள திருப்பூர்ல வாடகை லேட்டாச்சுன்னா அதுக்கு வட்டி போட்டு வசூல் பண்றதா பாதிக்கப்பட்டவங்க புகார் சொல்றாங்க. கவனம்.
வயதுப் பொண்ணுங்க, பசங்களை வேலைக்கு
அனுப்பிச்சு தேமேன்னு இருக்காதீங்க. அவங்க மேல தனிக்கவனமும் அக்கறையும் செலுத்தி பாதுகாப்பு
கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. உங்க குழந்தைகளை நீங்க நம்புங்க தப்பில்லை, ஆனா அவங்க வயதை நீங்க நம்பக்கூடாது. யோசுச்சுக்கங்க.
முன்பின் அறிமுகம் இல்லாதவங்ககூட தேவையில்லாத நட்பு வச்சுக்க வேண்டாம். யார், எந்த ஊர், என்ன சூழ்நிலைல இங்க வந்திருக்காங்கன்னு உங்களால
கண்டுபிடிக்க முடியாது. நம்பி ஏமாற வேண்டாம்.
அதுக்காக ஒதுங்கியே வாழணும்னு சொல்லல.
கவனமாக இருங்கன்னு சொல்றோம்.
எந்த ஊரா இருந்தாலும் சுய ஒழுக்கம் மிகவும்
முக்கியம். திருப்பூரும் அப்படித்தான். உழைச்ச காசை சரியா பயன்படுத்தினா நீங்க சீக்கிரம் முன்னேறலாம். உங்கள் சுய ஒழுக்கத்தை சோதிக்க எத்தனை வாய்ப்பு வந்தாலும் கட்டுப்பாடா இருங்க.
ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடனேயே உங்களை மூளைச்சலவை செய்ய ஒரு சில நபர்கள் வருவாங்க. அந்த கம்பெனிக்கு போனா அதிகம் சம்பளம் தருவாங்க, இந்த கம்பெனிக்கு ஆள் வேணுமாம்.. வந்தா அது இலவசம், இது இலவசம், சலுகை என உங்களை குழப்புவாங்க. வேலையை சரியா கத்துகிட்டு ஊர்
பழகுறவரையிலும், சம்பளம் சரியா கிடைக்கிற வரையிலும் எங்கேயும் போய் மாட்டிக்க வேண்டாம். கவனம்.
இனி அடுத்த வீடியோவில் எந்த கம்பெனிக்கு ஆட்கள் தேவைன்னு போன் நம்பரோடு உங்களை சந்திக்கிறோம். தொடர்ந்து இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து
பார்த்துட்டு வாங்க. பக்கத்துல பெல் பட்டனை கிளிக் பண்ணிட்டாதான் உங்க மொபைலுக்கு தகவல் ரெகுலரா தவறாம வரும். நிறைய விஷயம் பேசலாம். ஆல் தி பெஸ்ட், நன்றி டாலர் சிட்டி நியூஸ்.
FOR MORE VIDEOS CLICK:
#importantmessagefortirupurjobseekers
#youcanlivetirpurwithhappy
Негізгі бет BE ALERT IN TIRUPUR || திருப்பூரில் செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் என்ன? || JOB OPPORTUNITY ||
Пікірлер: 250