சேக்ஸ்பியரின் " கிங் லியர் " நாடகத்தில் ஒரு சிறு துளி
சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற அவலச்சுவை நாடகங்களுள் “கிங் லியர்” ஒன்றாகும்.
இங்கிலாந்து மன்னரான லியர் “ நமது கவலைகளையும் கடமைகளையும் முதுமையிலிருந்து விரட்டி இளமையின் முதுகில் ஏற்றி நிம்மதியாகச் சாவை நோக்கி ஊர்ந்து செல்ல வேண்டும், என்பதே நமது ஆழ்ந்த விருப்பம்”
எனக்கூறி இங்கிலாந்தின் அரச பொறுப்பினை ஒப்படைக்கத் தீர்மானிக்கிறார்.
லியர் மன்னன் தனது மூன்று பெண் பிள்ளைகளையும்
அழைத்து “ நம்மை அதிகமாக நேசிப்பவர் உங்களில் யார்? என்று சொல்லுங்கள்.
அதிக அன்பு செலுத்துபவருக்கு அளவிறந்த செல்வம்
கிடைக்கப்போகின்றது” என்று கூறுகின்றார் .
“அன்பு உணரப்பட வேண்டியது, உரைப்பதன்று”
என்பதனை முதுமையின் பிடிக்குள்
இருக்கும் லியர் புரிந்துகொள்ளவில்லை.
இத்தவறு அவலத்தவறாகிறது
லியர் மீது அன்புள்ள மூன்றாவது மகளை அவரே துரத்தும் நிலையினை உருவாக்குகின்றது.
இரண்டு பண்பற்ற பெண் பிள்ளைகளை நம்பத்தூண்டுகிறது.
“குறைந்தளவு தீங்கு செய்து அதிகளவு தீங்கினால் ஆட்பட்டிருக்கும் மனிதன் நான்”
என லியர் கூறுமளவுக்கு துயரங்களை
எதிர்நோக்குகின்றார் .
லியர் மன்னன் அந்தஸ்து, ஆதரவு, ஆட்சி, அதிகாரம்
ஆகியவற்றினை இழந்து அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டவராகக் காணப்படும் லியரைப் பார்த்து
“ எவனுக்கு தலைவைத்துப் படுக்க
வீடு இருக்கிறதோ அவன் தலைக்குள் ஒரு துளி மூளை இருக்கிறது”
என சேக்ஸ்பியரின் புத்திசாலிக் கோமாளி கூறுவான்.
கைவிடப்பட்ட லியரின் நிலையினைக் காண வாருங்கள், பாருங்கள், பகிருங்கள்.
(க.பொ.த உயர்தர நாடகமும் அரங்கியலும்
பாடத்திட்ட நாடகம்)
மேலும் எமது நாடகங்களை உடனுக்குடன் காண Channel இனை Subscribe செய்யுங்கள்
Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம்
Негізгі бет சேக்ஸ்பியரின் " கிங் லியர் " நாடகத்தில் ஒரு சிறு துளி Sun Drama Group | Srilankan Tamil Stage Drama
Пікірлер: 20