Chennai metro phase 2 Corridor 5 Underground section latest update
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடம் 5-ன் சுரங்கப்பாதை பணியின் தற்போதைய நிலவரம்
116 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வரும் இந்த சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ தூரத்திற்கு இந்த வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை பணியானது 5.8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. இந்த 5.8 கி.மீ தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணியை Tata Projects Limited என்ற நிறுவனம் ரூபாய் 1445.98 கோடி மதிப்பில் மேற்கொண்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் பற்றி பார்த்தோமேயானால் இதற்கான அசல் ஒப்பந்தப்புள்ளி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு அதேயாண்டு நவம்பர் மாதம் L & T நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கான குறைந்த ஏலதாரராக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் L & T நிறுவனத்தின் குறைந்த ஏல மதிப்பானது, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த ஒப்பந்தத்திற்கான மதிப்பீடு செய்த மதிப்பை விட அதிகமாக இருந்த காரணத்தால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இதற்கான மறு ஒப்பந்தப்புள்ளி அதே ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் இதற்கான தொழில்நுட்பம் வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி ஏலமும் நடைபெற்றது. இந்த நிதி ஏலத்தில் Tata Projects Limited என்ற நிறுவனம் குறைந்த மதிப்பில் ஏலம் வென்று இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் இந்த ஒப்பந்தத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆனது ரூ.1580 கோடி மதிப்பில் மதிப்பீடு செய்து Tata Projects Limited என்ற நிறுவனம் ரூ.1445.98 கோடி மதிப்பில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த ஒப்பந்தத்திற்கான ஒப்பந்தக் காலமாக 1395 நாட்கள் விதித்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி இந்த நிறுவனம் கொளத்தூர் சந்திப்பிலிருந்து நாதமுனி வரை இரட்டை சுரங்கப்பாதை மற்றும் தரை மட்டத்திலிருந்து சுரங்கப்பாதையை அணுகுவதற்கான சரிவுப்பாதை அமைப்பது கொளத்தூர் சந்திப்பு, ஸ்ரீனிவாசன் நகர், வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் நாதமுனி என ஐந்து இடங்களில் சுரங்கம் மெட்ரோ நிலையங்களை அமைப்பது, அந்த சுரங்க மெட்ரோ நிலையங்களில் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்குமான நுழைவு வாயில்கள், காற்றோட்ட அமைப்பு, குழாய்கள் அமைப்பது, Earthmate, கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். இந்த சுரங்கப்பாதை பணியில் Tata Projects Limited நிறுவனம் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த சுரங்க பாதை பணிக்காக முதற்கட்டமாக தடுப்பு வேலிகளை அமைப்பது, சோதனை முறையில் அகழி தோண்டுவது, அகழி பகுதிகளில் மண் சரியாமல் இருப்பதற்காக அதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது, நிலத்தடியில் உள்ள மின்சார அமைப்புகள், குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு அமைப்புகளை கண்டறிவது இந்த முதற்கட்ட பணிக்காக தோண்டப்பட்ட மண் மற்றும் சேற்றினை அப்புறப்படுத்துவது, சோதனை முறையில் தோண்டப்பட்ட அகழிகளை மண்ணை கொண்டு நிரப்புவது, கொடுக்கப்பட்ட வரைபடத்திற்கேற்ப கட்டுமான இடத்தை தயார் செய்வது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட பணிக்கான ஒப்பந்தத்தை Sri Radha Construction என்ற ஒப்பந்தம் நிறுவனம் ரூ.1,08,33,000 மதிப்பில் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டப் பணிக்கான கடனுதவியை ஜப்பானை சேர்ந்த JICA என்கிற வங்கியின் மூலமாக கிடைக்கிறது. இந்த திட்டப்பணிக்கான பொது ஆலோசனை நிறுவனமாக Nippon koei India Pvt Ltd, Aarvee associates architects engineers and consultants Pvt Ltd and Balaji railroad systems Pvt Ltd என்ற 3 நிறுவனங்கள் ஒரு கூட்டு நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணியானது சவாலாக இருக்கும். இதற்கான முக்கிய காரணம் இந்த திட்டத்திற்கான மண் பரிசோதனை நடைபெற்ற போது கொளத்தூர் சந்திப்பிலிருந்து நாதமுனி வரை சில அடி ஆழங்களில் ஒரே மாதிரியான பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணியானது சவாலாகவும், சற்று கால தாமதமாகவும் முடிக்கப்படலாம். இதில் சுரங்கப்பாதையின் அமைப்பானது ரெட்டேரி சந்திப்பிலிருந்து கொளத்தூர் சந்திப்பு வரை இதனுடைய சரிவுப்பாதையானது 7.5 மீ உயரத்திலிருந்து 8 மீட்டர் ஆழம் வரை அமைக்கப்படவுள்ளது. இதற்கடுத்து சுரங்கப்பாதையானது கொளத்தூர் சந்திப்பில் இருந்து நாதமுனி வரை குறைந்தபட்சம் 4 மீ-லிருந்து அதிகபட்சம் 15.5 மீ ஆழம் வரை மக்கள் குடியிருப்பு அடர்த்தியான பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. இதற்கடுத்து நாதமுனியிலிருந்து அண்ணாநகர் வரை சுரங்கப் பாதையிலிருந்து வரும் சரிவுப்பாதையானது 12-13 மீ அகலத்தில் 8 மீ ஆழத்திலிருந்து 7.5 மீ உயரம் வரை அமைக்கப்படவுள்ளது. அதேசமயம் இந்த வழித்தடத்தில் உள்ள கொளத்தூர் சந்திப்பு, ஸ்ரீனிவாச நகர், நாதமுனி என 3 சுரங்க மெட்ரோ நிலையங்களானது பயணச்சீட்டு வழங்குமிடம், சோதனை செய்யுமிடம், கடைகள் அடங்கிய பொது தளம் மற்றும் மெட்ரோ தொடர்வண்டிகளை அணுகுவதற்கான நடைமேடை அடங்கிய தளம் என 2 அடுக்குகளாக 190 மீ நீளத்திலும் 21.8 மீ அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. இதற்கடுத்து வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையம் மற்றும் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் என்ற 2 மெட்ரோ நிலையங்களானது 150 மீ நீளத்திலும் 21.4 மீ அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. இதில் வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையமானது வாகனம் நிறுத்துவதற்கான தளத்துடன் சேர்த்து 3 அடுக்குகளாக அமைக்கப்படவுள்ளது. இந்த வழித்தடம் 5-ல் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து நல்லூர் சுங்கச்சாவடி வரை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிப்பு செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு Almonds global infra consultant Limited & Four wall consultancy என்ற கூட்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
Негізгі бет Ойын-сауық Chennai metro phase 2 Corridor 5 Underground section | சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம் வழித்தடம் 5 🚇🚇
Пікірлер: 6