"கட்டுவிரியன்" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புத்தம் புதிய க்ரைம் நாவல்.
ராமநாதன் தன் கண்ணில் படும் தனக்கு பிடித்த பெண்களை அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் வன்புணர்வு செய்யும் அயோக்யன். கட்டுவிரியன் பாம்பைப் போன்ற கொடிய ராமநாதனின் கண்களில் படுகிறாள் அவன் மகன் சிவா காதலிக்கும் ரேவதி. ராமநாதன் ரேவதிக்கு குறிவைக்க அடுத்து என்ன? பரபரப்பான கட்டுவிரியன் நாவல் விடை சொல்லும்.
நாவலிலிருந்து
ராமநாதன் உள்ளே நுழைய எதிரில் வந்த முனியன் கும்பிட்டான்.
"என்ன முனியா பண்ணி இருக்க?"
"நாட்டுக்கோழி வறுவல் அய்யா"
"ரொம்ப நல்லது நம்ம நாட்டுக்கோழி உள்ள வந்திருக்கா?"
"ஆமாங்க பாவமா இருக்கு . வந்ததுல இருந்து அழுதுட்டிருக்கு " சொன்ன முனியனை புன்னகையுடன் ஏறிட்ட ராமநாதன் சொன்னார்.
"அதெல்லாம் பார்த்தா வேலை நடக்காது முனியா"
முனியன் ஒன்றும் பேசவில்லை. ராமநாதனின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவன் அவன் தான். ஆனால் வெளியே மூச்சுக்கூட காட்ட மாட்டான். அவனுக்கு தெரியும் மூச்சு காட்டினால் மூச்சு நின்றுவிடும் என்று.
அறைக்குள் நுழைந்த ராமநாதனைப் பார்த்து அமர்ந்திருந்த செல்வி பயத்துடன் எழுந்து நின்றாள். கண்களில் கண்ணீர் கோடாய் இருக்க ராமநாதன் புன்னகைத்தார்.
"காவிரியில தண்ணியிருக்கோ இல்லையோ உன் கண்ணுல தண்ணி ஜாஸ்தியா இருக்கு"
"அய்யா"
"ம்"
"என்னை விட்டுடுங்கய்யா. எனக்கு பயமாயிருக்கு"
"எல்லாரும் சொல்றதத்தான் நீயும் சொல்ற. முதல் முறை அப்படித்தான் பயமா இருக்கும். என்ன நடக்குமோன்னு ஒரு டென்ஷனா இருக்கும். அதுக்கப்புறம் நீயே வந்து அடுத்து எப்பன்னு கேப்பே நம்ம பர்ஃபாமென்ஸ் அப்படி. " சொன்னபடி அவளை நெருங்க அவள் சட்டென்று அவர் காலில் விழுந்தாள். கதறினாள்.
"அய்யா வேண்டாங்கய்யா"
அவள் முதுகு வியர்த்திருக்க அவளைத் தூக்கினார். அவள் அவஸ்தையாய் பார்க்க
"கண்ணு கால்ல மத்த சமயத்துல விழுந்தா ஆசீர்வாதம் பண்றேன். இப்ப வேற வழி இல்ல கண்ணு" சொன்னவர் பார்வை அவள் உடம்பில் ஊடுருவ அவன் கூசினாள்.
"சரி சரி பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம சட்டுபுட்டுன்னு ட்ரஸ்ஸக் கழட்டு" அவர் சொல்ல திக்கென்று அதிர்ந்தாள்.
"என்ன கண்ணு நான் சொன்னது புரியலையா? மளார்னு டிரஸ்ஸ அவுத்துட்டு இப்படி வந்து படு. வேலைய முடிச்சுட்டு வெளியில போவோம். முனியன் நாட்டுக்கோழி பண்ணிருக்கான். செம்மயா இருக்கும். ரெண்டு பேரும் சாப்பிட்டு எதுவும் நடக்காத மாதிரி நீ உன் வீட்டுக்குப் போயிரு. நான் என் வீட்டுக்குப் போயிடறேன். சரியா?"
ராமநாதன் சொல்ல செல்வி கண்களில் நீர் வழிய அவரைப் பார்த்தாள். அவர் முகம் மாறியது.
"நீ வேலைக்கு ஆகமாட்டே. கோழியே கோழியே இறகு போடுன்னா கோழி இறகு போடாது. நாமதான் புடுங்கணும். " சொன்ன ராமனாதன் அவளைக் கட்டிலில் தள்ளினார்.
கட்டுவிரியன் அமேசானில் படிக்க
www.amazon.in/...
www.amazon.com...
கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
அமிர்தா (வாசித்தவர்)
#crime
#crimestory
#tamilaudiobooks
#tamilvoiceover
#tamilaudiostories
#familystory
#lovestory
#familynovels
#novels
#thrillernovel
#voiceovertamil
#gktamilnovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#tamilcrimestories
#tamilcrimenovels
#gavudhamstories
Негізгі бет crime story full story/Tamil audiobooks/ online /suspense /new novel/கட்டுவிரியன்
Пікірлер: 34