விஞ்ஞான வளர்ச்சி என்பது படிப்படியாக வார்ந்ததே தவிர சட்டென்று எதுவும் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. உதாரணமா முதலில் உருண்டோடும் கல்லைக் கண்டு வட்ட உருளும் கல் சக்கரமாகவும் பிறகு அதில் விலங்குகள் பூட்டப்பட்டு மாட்டு வண்டி குதிரை வண்டிகள் போலவும், பிறகு அதில் பல்சக்கரம் பொருத்தப்பட்டு மிதி வண்டிகளாகவும், மோட்டார் பொருத்தி மோட்டார் வாகனமாகவும், பின் சக்கரங்கள் நான்காக பொருத்தி வசதிகள் செய்து car போன்ற வாகனங்களாகவும் மேலும் பல நவீன வசதிகளும் கண்டுபிடிப்புகளும் பொருத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வளர்ந்தன என்பதே உண்மை. திடீர் என யாரும் ராக்கெட் களையும் விமானங்களையும் கண்டுபிடித்துவிட வில்லை என்பதே உண்மை.
சக்கரம் கண்டுபிடிக்கப் படா விட்டால் bike , car போன்ற வாகனங்கள் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. இதை போலவே அனைத்தும், மூலிகை மருந்துகள் இன்றி நவீன மருத்துவம் இல்லை, பாரம்பரிய சூத்திரங்கள் இன்றி நவீன சூத்திரங்கள் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தவகையில் நான் ஆய்வு செய்த ஒரு ஆச்சரியமான ஒரு விஷயம்தான் அகால மரண கண்டி.
அனைவருக்கும் வணக்கம் நான் தமிழ் கலை மற்றும் வாழ்வியல் சார் ஆய்வாளர் செந்தில்நாதன்.
"அகால மரண கண்டி" பேரைக் கேட்டாலே திகிலா இருக்கே... ஒருவேளை இது மாந்திரீகம் சார்ந்ததா இருக்குமோ .... அப்படி இல்லை...
இந்தக்காலத்தில் இவ்வளவு தொழில் நுட்ப வளர்ச்சியை கொண்டு வாழ்கிறோம். நவீன விஞ்ஞானம், மருத்துவம், கல்வி, டிஜிட்டல் world இப்படி வாழ்ந்தாலும், சில துரோகங்களும், வஞ்சமும் எக்காலத்திலும் உண்டு என்பதை மறுக்கவே முடியாது. ஒருவர் மரணித்துவிட்டால் அவர் எப்படி இறந்தார் என்பதை உறுதி செய்ய post-mortem என்ற முறையை பயன்படுத்தி அறிந்து கொள்வது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த முறையாம் இதைவிட சிறப்பாக அக்காலத்தில் மிக நுட்பமாக அறிந்துகொள்ளும் முறையே "அகால மரண கண்டி" . இந்த ஓலைச்சுவடி என் கைகளுக்கு கிடைத்தவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.... எவ்வளவு ரகசியங்கள்... இன்னளவும் வெளிவராத பெரிய பெரிய ரகசியங்கள்... இதைப்பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ளாவிட்டாலும் நமக்கு இந்த வாழ்க்கைக்கு தேவையானதை தெரிந்து அறிந்து ஆரோக்கியமாய் வாழ சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த அகால மரண கண்டி ஓலையை ஆராய்ந்து பார்த்ததில் இது முற்கால பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்ததை நம்மால் அறிய முடிகிறது.
இன்றைய காலத்தில் நமக்கு தெரியாத பல விஷயங்களைப் பற்றி பல தகவல்கள் இவர்கள் வைத்துள்ளார்கள் என்பது இந்த அகால மரண கண்டி நிலம் வெளிப்படையாக தெரியவருகிறது. உண்மையில் கூறவேண்டும் என்றால் தமிழினம் இடையில் தனது அறிவை தொலைத்து வேறு பாதையில் சென்றுவிட்டது என்றே நாம் கூறலாம்.
இதில் அதிகமாக உண்ணும் பொருள் எப்படி விஷமாக மாறுகிறது என்பதை பற்றி நாம் இந்த வீடியோவில் பார்ப்போம்!
எதை எதோடு சேர்த்து உண்டால் நஞ்சாகும் என்வதை தெரிந்துகொண்டால் நாம் வெகு காலம் ஆரோக்கியமாய் வாழலாம்
இந்த சூத்திரம் சொல்லக்கூடிய முதல் விஷயமே பெரிய shock.
அது என்னவென்றால் வெற்றிலையும், நல்லெண்ணையும்... இந்த இரு பொருளையும் சேர்த்து உண்டால் நஞ்சாகும். இதற்கும் வைத்தியம் பார்க்காமல் விட்டால் உள்ளுறுப்புகள் கெட்டு மூக்கில் குருதி பெருகும் என்று கூறியுள்ளனர். சற்று சிந்தித்து பாருங்கள் அதீத நல்லெண்ணெய் கொண்ட பலகாரம், நல்லெண்ணெயில் பொறித்த வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களை உண்ட பிறகு வெற்றிலை போடுவதால் நமக்கு வயிரற்று உபாதைகள் வந்து வயிறு கேட்டுவிடலாம், உடல்நலம் கேடாகலாம். இதை என்னவென்று நாம் நினைத்துக் கொள்வோம். உண்டதில் எதுவோ food poision ஆகிவிட்டது என்று எண்ணி பார்ப்பவர்கள் சொன்னதையெல்லாம் செய்வோம்....
இதைவிட அதிர்ச்சியான ரகசியம் என்னவென்றால் சோறும் அதிக உப்பும் கலந்து உண்டால் மலவாய் (anus) இறுகி மூடிக்கொள்ளும். எவ்வளவு ஆபத்து பாருங்கள்.
அடுத்து வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்விர்கள். அதில் என்னென்ன சேர்ப்பீர்கள்?
அரிசி, வெள்ளம்,நெய்,திராச்சை, இதெல்லாம் சரி, சுவைக்கு மற்றோன்றை சேர்ப்பீர்கள்... அது என்ன? தெரிகிறதா...
பச்சை கற்பூரம்.... சில புத்திசாலிகள் அதை நீரில் கலந்தும், புளியோதரையில் சேர்த்தும் சுவைக்காக உண்பார்கள்... அது சரி என்று நினைக்கிறீர்களா???
பச்சை கற்பூரம் தின்றால், வயிறு கலக்கம் உண்டாகும் , உடலில் உள்ள சத்து நீர் கெடும்,குடல் வீங்கும், உள்ளுறுப்பு தசைகள் விரிசல் உண்டாகும்.
என்ன இவன் இப்படி பயமுறுத்துகிறானே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் நோயற்று ஆரோக்கியமாய் வாழவே இதை நான் உங்களிடம் பகிர்கிறேன்.
தயிரும், மீனும் சேர்த்தால் விஷம், பளபளப்பான மீனை தோலுடன் சமைத்து உண்டால் விஷம், ஏனெனில் பாதரச சத்து அதில் அதிகமாக இருப்பதால் தோல் நோய்களை ஏற்படுத்தும்.
சரி, இப்போது சில குணங்களையும் சொல்லுகிறேன், தாங்களோ, தங்கள் குடும்பத்தினரோ இல்லை நீங்கள் பார்க்குமிடத்தில் ஏதாவது திம்பம் ஏற்பாட்டில் அவர்களை நீங்கள் அந்த துன்பத்திலிருந்து மீட்டெடுக்க, first aid ஆகா சில விஷயங்கள் செய்ய அகால மரண கண்டியிலுருந்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில குறிப்பு.
Негізгі бет எதோடு எதை சேர்த்து உண்டால் நஞ்சாகும் | பாண்டியர் கால ஓலைச்சுவடி கூறும் உண்மை
No video
Пікірлер: 14