#sivaji #vanisri #msv #kannadasan #tms #susheela #spb #lreswari #4koldsongs
எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் | Yedarkkum Oru Kaalam Varum | M. S. Viswanathan | Sivagamiyin Selvan . Tamil Lyrics in Description .
Movie : Sivagamiyin Selvan
Music : M. S. Viswanathan
Starring : Sivaji Ganesan, Vanisri, Latha
Song : Yedarkkum Oru Kaalam Varum
Singers : M. S. Viswanathan
Lyrics : Vaali
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே
ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே…..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே…..ஏ…….ஏ……
ஆண் : மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : அடையாத கதவிருக்கும்
ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே
மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று
மற்றொரு பேரு
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : நிழல் கொடுக்க தந்தை என்ற
மரம் இருந்தது
நேற்று வந்த காற்றில் அந்த
மரம் விழுந்தது
கனி சுமந்த பூங்கொடியோ
கண் கலங்குது
இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது
அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே…..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
Негізгі бет எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் | Yedarkkum Oru Kaalam Varum | M. S. Viswanathan | Sivagamiyin Selvan
Пікірлер: 31