கோலாட்டத்தின் சிறப்பு :
ஒருமுறை பந்தாசுரனுக்கும், தேவர்களுக்கும் போர் மூண்டது. தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதி தவத்தில் ஆழ்ந்தாள். தவக்கனல் அதிகரித்ததால் பார்வதியின் முகம் பொலிவை இழந்து கருமையாக மாறியது. வருந்திய பார்வதியின் தோழிகள் நந்தீஸ்வரரைச் சரணடைந்து அவர் முன்னிலையில் கோலாட்டம் ஆடினர். அப்போது பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை மாறி அழகாக மாறியது. இதன் பின்னர் பூலோகத்தில் கோலாட்டம் ஆடும் வழக்கம் ஏற்பட்டது.
கொலு வீற்றிருக்கும் இறைவனுக்கு மகிழ்ச்சியினை ஊட்டும் விதமாக தங்களின் நடன அசைவுகளின் மூலம் நன்றியினை உரித்தாக்கினர்.
நவராத்திரியை சிறப்பிக்கும் விதமாக மாணவக் கண் மணிகள் கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் பட்டாடை உடுத்தி, வண்ணம் கொண்ட கோலாட்ட குச்சி இரண்டைக் கையில் ஏந்தி, ஒய்யாரமாய் ஒரே ஓசையில் கோலடித்து கலைநயத்தை கண்முன்னே காட்சிப்படுத்தும் கும்மியடிக் கோலாட்டத்தை நிகழ்த்தினார்கள்.. அது மனதிற்கு மகிழ்வும் இதயத்திற்கு இதமும் தந்தது..
Негізгі бет HAPPY NAVARATRI 2024
Пікірлер: 1