உங்க வீட்ல ஒரு ரூம்ல பேய் இருந்தா...? அது தான் "அருகில்"
கண்மணி வீட்டில் ஒரு பேய் அவளைப் பழிவாங்க வெறியுடன் அலைகிறது. கண்மணியின் காதல் கணவன் சூர்யா அவளைக் காப்பாற்ற தன்னாலான அனைத்து முயற்சியும் செய்கிறான். அடுத்து என்ன?
ஆரம்பம் முதல் இறுதி வரையில் செம விறுவிறுப்பான ஹாரர் முழு நாவல் "அருகில்" ஆவி வரும் நேரமெல்லாம் உங்களை அலற வைக்கும்.
படித்தோர் அனைவரும் பாராட்டி மகிழ்ந்த "அருகில்" அமேசானில் கவுதம் கருணாநிதியின் ஹாரர் & க்ரைம் 30 in 1 என்ற முப்பது ஹாரர் மற்றும் க்ரைம் முழு நாவல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அமேசானில் படித்து மகிழ
www.amazon.in/...
www.amazon.com...
கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
அமிர்தா (வாசித்தவர்)
#horrorstory
#ghoststory
#horrorstories
#ghoststories
#tamilaudiobook
#tamilaudiostories
#voiceovertamil
#gktamilnovels
#tamilaudionovels
#tamilhorrorstory
#tamilnovelsaudiobooks
#tamilcrimestories
#tamilcrimenovels
#gkcrimenovels
#gkhorrorstories
#gavudhamstories
#rjamirdhavoice
#tamilhorrornovels
நாவலில் இருந்து
“என்னம்மா ஆச்சு?”
“பாம்பு கடிச்சிடுச்சுங்க..” சொன்னவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து விலகாத கண்களுடன் சொன்னாள்.
“சாதாரணமாக இல்லைங்க..”
“என்ன சொல்றே கண்மணி?” சூர்யா அதிர்ச்சியானான்.
“பெட் ரூம்ல இருந்த பாம்பு வெறியோட வந்திச்சு..ஹாலுக்கு ஓடினேன்..ஒவ்வொரு ரூமுக்கும் ஓடினேன்.. தோட்டத்துக்கு தப்பிச்சு ஓடினேன்.. அந்த பாம்பு விடவேயில்ல..அது துரத்துனது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு..”
ஒரு நிமிடம் பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.
“கவலைப்படாத கண்மணி..ஏதாவது பண்றேன்”
“திரும்பவும் உங்களை பார்ப்பேன்னு நம்பிக்கையே இல்லைங்க எனக்கு..” சொன்ன கண்மணியின் தலையைக் கோதிவிட்டான் சூர்யா..
அவள் கண்கள் செருக மெதுவாக வெளியே வந்தான்.
வருணிடம் நடந்ததை சொல்ல.. அவன் திடுக்கிட்டான்.
“என்னடா சொல்றே? பாம்பு துரத்துச்சா?”
“ஆமா வருண்..”
“அப்போ..அது இயல்பா நடந்தது கிடையாது..” சொன்ன வருண் சூர்யாவைக் கவலையாகப் பார்த்தான்.
“நாம உடனடியாக ஏதாவது பண்ணனும். உன் வீட்டில் இருக்கிறது யாருன்னு தெரியணும்..”
“அது எப்படி தெரிஞ்சுக்க முடியும்?”
“மீடியம் கிட்டே பேசற ஒருத்தர் இருக்காருன்னு சொன்னேனே.. அவரை விட்டு யாருன்னு கேப்போம்..”
“சரியா வருமா?”
“வேற வழியில்லை நமக்கு..”
“ஒருவேளை அவர் கூப்பிட்டுப் பார்த்தும் வராமப் போனா ..”
“அதுக்கும் வாய்ப்பிருக்கு..சூர்யா மனசத் தளர விடாத..
நம்ம சூழ்நிலை ரொம்பவே மோசமா இருக்கு.. ஒண்ணு யாரதுன்னு தெரிஞ்சு ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறது.. இல்லேன்னா அது கிட்டயே சரண்டர் ஆகிறது.. எப்போ எப்படி கொல்லணும்னு நினைக்கறியோ அப்போ நீயே கொன்னுக்கோன்னு சரண்டர் ஆகிறது..” வருண் புன்னகைக்க..
சூர்யாவும் புன்னகைத்தான்.
“கவலைப்படாத சூர்யா.. கிளம்பு ..இப்பயே நேராப் போய் பேசிட்டு வருவோம்..”
வருண் சொல்ல சூர்யா தலையசைத்தான்.
***
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கண்மணி மீண்டும் வீட்டிற்குப் போகத் தயங்கியவள் சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாக வந்திருந்தாள்.
சூர்யாவும் வருணும் போய் யாரையோ பார்த்திருக்கிறார்கள் என்றும் அவர் எந்த ஆவியாக இருந்தாலும் பேசவைக்கும் வல்லமை உடையவர் என்றும் அதற்கு அந்த ஆவி இருக்கும் இடத்தில் தான் நாமும் இருக்க வேண்டும் என்று அவர் சொல்லியதாக சூர்யா கூறியிருக்க..
கண்மணி வேறு வழியின்றி தலையசைத்திருந்தாள். அன்று மாலையே அவர் வருவதாக சூர்யா தெரிவித்திருக்க அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
பாம்பு துரத்தியது அவளது மனக்கண் முன் வந்து போக அவளையறியாமல் அவள் உடல் ஒரு நடுக்கத்திற்கு ஆட்பட்டது.
“என்னங்க..”
சூர்யாவைக் கூப்பிட பூஜை பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த சூர்யா நிமிர்ந்தான்.
“சொல்லும்மா..”
“வர்றவர் யாருன்னு சொன்னீங்க?”
“பெரிய ஆள் இந்த மாதிரி விஷயங்களில்.. அவர் எந்த ஆவியா இருந்தாலும் பேச வச்சிடுவார்..யாரு என்னன்னு தெரிஞ்சா நமக்கு அடுத்து என்ன பண்ணனும்னு ஒரு வழி கிடைக்கும்மா..”
சூர்யா சொல்ல அவள் மௌனமாய் தலையசைத்தாள்.
சூர்யாவின் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான். வருண்.
“சொல்லு வருண்..”
“என்னடா அவர் வந்துட்டாரா?”
“இல்ல வருண்..எதிர்பார்த்திட்டிருக்கோம்..”
“எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னார்? அஞ்சு மணிக்குத் தானே?”
“ஆமா வருண்”
“இப்போ மணி நாலாகுது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு..”
வருண் சொல்ல
“ஆமா வருண்..” தலையசைத்தான்.
“என்னை அங்கே இருக்கக்கூடாதுன்னு அவர் கண்டிப்பா சொல்லிட்டார்..இல்லேன்னா வந்திருப்பேன்.. “ வருண் சொல்ல
“பரவாயில்லை வருண்..”
“கவனமா இரு..பூஜைக்கு முன்னாடியும் பூஜை நடக்கும்போதும்..”
“சரி வருண்..”
“பூஜை முடிஞ்ச பிறகு ரெண்டு பேரும் கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.. இன்னிக்கு நைட் உன் வீட்ல தங்காதீங்க..” வருண் சொல்ல..
“தேங்க்ஸ் டா..” சூர்யா நெகிழ்ந்தான்.
‘உன் தேங்க்ஸ் நீயே வெச்சுக்கோ..என் மனசு பூரா அங்க தான் இருக்கு.. கவனம்..”
வருணின் எச்சரிக்கை சூர்யாவிற்குள் ஒரு பயத்தை உண்டாக்கியது
‘எல்லாம் நல்லபடி நடக்குமா?’
மணி பார்த்தான். ஐந்து ஆவதற்கு இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் இருக்க தவிப்பாய் வாசலையே பார்த்தபடி இருந்தான்.
Негізгі бет horror story ghost story audio book online/Tamil audiobooks/gk tamil novels/gk/அருகில் /new novel
Пікірлер: 38