#thirugnanasambantharpathigam #இடரினும்தளரினும் #nimalararul
பணம் தரும் பதிகம்
1. இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
2. வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
3. நனவினுங் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
4. தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றா தென்நா
கைமல்கு வரிசிலை கணையொன்றினால்
மும்மதில் எரியெழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
5. கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
6. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
7.. வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
8. பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல் அலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
10. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே..
11. அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர்
நிலமிசை நிலையிலரே
Негізгі бет Idarinum Thalarinum Lyrics in Tamil | இடரினும் தளரினும் பாடல் வரிகள் | பணம் தரும் பதிகம் | Thevaram
Пікірлер: 97