அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கொழும்புக் கம்பன் விழா 2018 மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல்01 ஆம் திகதி வரை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வாக “கம்பனில் பிரமாணங்கள்” எனும் பொருளிலான சிந்தனையரங்கம் இடம்பெற்றது. இச்சிந்தனையரங்கத்திற்கு கம்பவாரிதி.இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார். ‘அனுமானப்பிரமாணம்’ எனும் பொருளில் கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் ‘ஆகமப்பிரமாணம்’ எனும் பொருளில் புலவர் இராமலிங்கம் அவர்களும் ‘இன்மைப்பிரமாணம்’ எனும் பொருளில் இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களும் 'உவமைப்பிரமாணம்’ எனும் பொருளில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் உரையாற்றினர். இந்த நிகழ்விற்கான மங்கல விளக்கினை ஜே
வி.பி.மத்தியகுழு உறுப்பினர் கௌரவ ஆர். சந்திரசேகர் தம்பதியர் ஏற்றிவைத்தனர் . இந் நிகழ்விற்கான கடவுள் வாழ்த்தினை திரு .ம .தயாபரன் அவர்கள் இசைத்து மகிழ்ந்தார். இந்நிகழ்விற்கான தலைமையுரையினை புதுச்சேரிச் சட்டசபையின் துணைச்சபாநாயகர் மாண்புமிகு வி.பி.சிவக்கொழுந்து ஐயா அவர்கள் ஆற்றினார். இந்நிகழவிற்கான தொடக்கவுரையினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி அதிபர் திரு. ஏ.பி.ஜெயராஜா அவர்கள் நிகழ்த்தினார். பெருந்திரளான கம்பரசிகர்கள் இந்நிகழ்வை கண்டு களித்தனர்.
Негізгі бет Ilangai Jeyaraj - சிந்தனையரங்கம் -ஸ்ரீ.பிரசாந்தன் - Colombo Kamban Vizha 2018 | கொழும்பு கம்பன் விழா
Пікірлер: 31