இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா கிருமித்தாக்கத்தால் நாம் அனைவரும் வீடுகளில் அடங்கியிருக்கிறோம். பாரிய உயிரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதிலிருந்து மீண்டு இயல்பு நிலை காண யாதொரு வழியையும் காணமுடியவில்லை. கிருமித் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் நமக்கெல்லாம் இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் இறையருளை வேண்டுதல் என்ற ஒன்றுமட்டுமே. நம் இந்துசமய வரலாற்றில் இத்தகைய பேரிடர்களின் போதெல்லாம் நமசிவாய மந்திரத்தை மனப்பூர்வமாக உச்சரித்து இறையருளால் பேரிடர்களிலிருந்தெல்லாம் மீண்டினுக்கிறார்கள் எம் முன்னோர்கள். எனவே எம் குருநாதர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் நாம் இறையருளால் இப்பேரிடரில் இருந்து மீண்டு கொள்வதற்கான வழிவகைகளைக்கூறி உலக நன்மைக்காக இந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். பின்பற்றிப்பயன்பெறுக.
Негізгі бет Ilangai jeyaraj speech-“நற்றுணையாவது நமச்சிவாயவே”-கம்பவாரிதி-kambavarithi-2020
Пікірлер: 70