அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகரும் சிறந்த இலக்கியப் பேச்சாளருமான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் இருந்து நாம் வெளிவர இறை நம்பிக்கையோடு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என உலகெங்கிலிம் உள்ள இறைநம்பிக்கை கொண்ட அனைவரையும் கேட்டிருந்தார். வேற்றுமதத்தவர்களும் தத்தமது மதங்கள் சொல்கின்ற மந்திரங்களை மனங்கொண்டு துதியுங்கள் என கேட்டிருந்தார். அந்த காணொளியைத் தொடர்ந்து நம்பிக்கையோடு தீவிரமாக முயன்றால் எம் அனைவரது ஒருமித்த எண்ணமும் வெற்றியை உண்டாக்கும் என்ற உண்மையை வலியுறுத்தி மீண்டும் ஓர் காணொளியை வெளியிட்டிருக்கிறார். "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்" எனும் குறட்பாவை மனங்கொண்டு முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என உறுதிபட உரைத்து நிற்கிறார். இக்காணொளியைக் கேட்டுப் பயன் பெறுவோம்.
Негізгі бет Ilangai jeyaraj speech-“நம்பினார் கெடுவதில்லை”-கம்பவாாிதி-kambavarithi-2020
Пікірлер: 22