என் உடலும் உயிரும் உனக்காக…
திருவுடல் திரு இரத்தம் பெருவிழா - 2024
தொடக்கம்:
திருத்தந்தை நான்காம் உர்பானுஸ் கி.பி. 1264-ல் இதை வழிபாட்டில் புகுத்தினார். அதற்கு முன்னதாக சில ஆண்டுகளில் நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் முழுமையான இருப்பு பற்றிய நிறைய சந்தேகங்கள் திருச்சபையினரை துளைத்தன.
ஜெர்மானிய குரு - சந்தேகம் - இத்தாலி திருத்தலங்கள் தரிசித்தல், போல்சீனா ஆலயத்தில் திருப்பலியில் - அப்பம் பிட்கப்படும் போது அப்பத்திலிருந்து திரு இரத்தமானது கசிந்து திருத்துகில்களை நனைத்தது …. அங்கிருந்த ஆயர் வழியாக திருத்தந்தைக்கு சொல்லப்பட்டது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட நற்கருணை அற்புதமாக கிபி 1264 -ல் இத்தாலியின் ஓர்வியட்டோ நகரில் முதல் நற்கருணை பவனியாக கொண்டாடப்பட்டது.
விப.24- இஸ்ரயேலரோடு ஆண்டவர் செய்து கொண்ட உடன்படிக்கை
எகிப்தியரிடமிருந்து மீட்கப் பெறல்…
சீனாய் மலைக்கு கொண்டு வரப்படுதல்
பத்து கட்டளைகள் வழங்கப்படல்
வாழ்வோடு தொடர்புடைய சட்டங்கள் தரப்படல்
பன்னிரு குலங்களை அடையாளப்படுத்தும் பன்னிரு தூண்கள் பலிபீடம் அருகில் அமைக்கப்படுதல்
ஆண்டவருடைய உடன்படிக்கை மக்கள் அனைவரும் கேட்கும்படி படிக்கப்படுதல்
விலங்குகளின் இரத்தம் பலிபீடம் மீதும் மக்கள் மீதும் தெளிக்கப்படுதல்
ஆண்டவருடைய வார்த்தைகளை கடைப்பிடிப்போம் என்று மக்கள் அறிக்கையிடுதல்
இரத்தம் அவர்கள் மீது தெளிக்கப்பட்டு உடன்படிக்கை ஏற்படுத்தப்படுதல்.
எபிரேயர் 9- இயேசு கிறிஸ்து தலைமைக்குருவின் இரத்தம் சிந்திய ஒரே பலி வழியாக தூய்மை பெறுகிறோம், நாம் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகிறோம்.
தூய்மையான மனச்சான்று உடையவர்களாய் இயேசு இறிஸ்து என்னும் இணைப்பாளர் வழியாக புதிய உடன்படிக்கையில் நுழைகிறோம்.
மாற் 14
ஆண்டாண்டு காலமாக விலங்குகளின் இரத்தம் வழியாக செலுத்தப்பட்ட பாஸ்காபலி ஆண்டவர் இயேசு இது உடல், இது எனது உடன்படிக்கையின் இரத்தம் என்று முழுச்சுதந்திரத்துடன் தற்கையளிப்பு செய்ததன் வழியாக ஒரே நிலையான நிறைவான பலியாக என்றுமுள உடன்படிக்கையாக மாற்றப்படுதல். பன்னிரு சீடர்களும், இயேசுவே குருவும், பலியும், பலிபீடமுமாக காட்சியளிக்கிறார். தன்னையே உணவாக தருகிறார்.
இயேசுவின் உடலும் இரத்தமும் நம்முள் உணர்த்தும் செய்திகள் என்னென்ன….
நம் உடலும் உயிரும் கடவுள் தந்தது.
அதை அவருக்கே உயிருள்ள காணிக்கையாக
ஒப்புக்கொடுக்க வேண்டும்
நமது உடல் புனிதமானது.
இதில் இச்சைக்குரிய செயல்பாடுகளால்
கொச்சைப்படுத்தி களங்கப்படுத்தக்கூடாது.
காமத்தின் கோரத்தாண்டவம் pornography எனும்
மனிதனின் புனிதமான பாலியல் உறவுகளை
இச்சைக்கான ஒன்றாக படம்பிடித்து
அந்த மயக்கத்தில் பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர்களும்
மதியங்கிட அழைக்கிறது.
இது முழுமையாக வேரறுக்கப்பட வேண்டிய
உடலுக்கு எதிரான பாவமாகும்.
இயேசுவின் உடலும் இரத்தமும்
அவரது தன்னிகரில்லா தியாகத்தால் நமக்கு அவரே தந்துள்ளார். தற்கையளிப்பு வாயிலாக நாம் நம்மை
- நேரம், உழைப்பு, அறிவு, திறமைகள், ஆற்றல் - போன்றவற்றை தேவையில் இருப்பாரோடு பகிர்ந்து அளிக்க வேண்டும்.
இன்றைய உலகம் இந்த உடலை கொண்டாடுகிறது.
தேவைக்கும் அதிகப்படியான செலவுகள் செய்து
அதை பராமரிக்க நினைக்கிறது,
அடுத்தவரது உடலை கொச்சைப்படுத்துகிறது… கருப்பு, சிவப்பு, உயரம், குட்டை, ஒல்லி, குண்டு என அவசியமற்ற விமர்சனங்களால் உடல் மீது வன்முறை தொடர்கிறது. கடவுளின் உருவிலும் சாயலிலும் நாம் படைக்கப்பட்டவர்கள் என்பதை மறந்து விடுகிறது.
நோயாளிகள், உடலில் உறுதியற்றவர்கள், முதியவர்களை சமூகம் ஒதுக்கி வைக்கிறது.
எளிமை, நட்பு, பணிவிடை புரிதல் போன்ற பண்புகளை உணர்த்துகிறது.
ஏழைகளுக்கு உணவிடுதல் - ஏழைகளோடு உணவருந்துதல் - ஏழு கிறிஸ்தவ முதன்மை பண்புகளில் ஒன்று. ஆன்மீக உணவில் பங்கெடுக்கும் நாம் எளியவர், வறியவர். பசியுற்றோரிடம் உணவை பகிர்ந்திட வேண்டும். சமபந்தியில் கலந்திட வேண்டும்.
இயேசுவின் தற்கையளிப்பு வலிமையுடையோர், அதிகாரம் பொருந்தியோர், மற்றும் அநீதமான தண்டனையை ஏற்ற ஓர் தனி மனித போராட்டத்தின் விளைவாக உருவானது. ஆக, கிறிஸ்தவர்கள் தங்கள் உடலின் வாயிலாக அனைத்து மக்களோடும் எவ்வித பாரபட்சமற்ற முறையில் உறவாட வேண்டும். தங்கள் வியர்வை, இரத்தம், ஏன் தங்கள் உயிரையே எளிய மனிதர்களின் முன்னேற்றத்திற்காக மனமுவந்து தந்திட முன்வர வேண்டும்.
இறுதியாக,
விப- 24 - கடவுளை கண்டனர்… உண்டு குடித்தனர்.
திருப்பலியில் நாள்தோறும் இயேசுவை காண்போம்…
நற்கருணையில் பங்கெடுத்து
திருவுடலை உண்டு திரு இரத்தத்தை குடித்து
அவரது அன்பின் கட்டளையை வாழ்வாக்குவோம்.
இயேசுவின் திருவுடல் திரு இரத்தம்
நம்மை வெறும் சடங்காற்றும் மனநிலையிலிருந்து விடுவித்து, நற்சமூகமாகும், நீதிக்காக போராடும்,
இயேசுவின் விழுமியங்களான அன்பு, நீதி, சமத்துவத்திற்காக
நிலைப்பாடு எடுக்கும் மனிதர்களாக மாற்றிடட்டும்.
Негізгі бет இயேசுவின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழா - 2024- Solemnity of the Body and Blood of Christ
No video
Пікірлер: 3