#aliyar #aliyardam #pollachi #anaimalai
அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட அழகிய அணை ஆழியார் அணை. பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது.
1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது, அணைக்கு முதன்மையான நோக்கம் வேளாண்மை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கு பாசனத்திற்கு ஆதரதிற்கும் ஆகும். அணை உயரம் 81 மீட்டர். அணையின் கீழே ஒரு நன்கு பராமரிக்கப்படும் பூங்கா உள்ளது. நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள அனமலை கண்களுக்கு ஒரு விருந்து, படகு சவாரி இங்கே இருக்கிறது.
ஆழியாறு அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய தர நிர்ணய அமைவன பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.
1962இல் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை காமராஜரால் கட்டப்பட்டது.
ஆழியாறு அணை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சில ஆறுகளில் ஒன்றாகும்.அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் சீறி பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து வரும் வண்ணம் உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆகும்.
Негізгі бет 🌤️கோடை சுற்றுலா 😎ஆழியாறு அணை பொள்ளாச்சி 🌨️| Pollachi Aliyar Dam Tour | Aliyar River | gptamil vlogz
Пікірлер: 6