முள்ளும் மலரும் படத்தில் காளி என்னும் பாத்திரப்படைப்பை நுட்பமாகவும் உயிரோட்டமாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தும் தருணம் இது. எளிய அடித்தட்டு மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் சக மனிதர்கள் மீது இருக்கும் பரிவையும், அன்பையும் சொல்லும். அதே நேரத்தில் அதிகாரத்திடம் காட்டும் ரோஷத்தையும் வெளிப்படுத்தும். நடிகர்கள் ரஜினிகாந்த்தும், சரத்பாபுவும் கச்சிதமாக நடித்திருப்பார்கள். டிராலியின் இயந்திர ஓசையோடு இணைந்தும், இயைந்தும் இளையாராஜாவிடமிருந்து பிறக்கும் இசை அற்புதமான உணர்வுகளை மீட்டும். இயக்குனர் மகேந்திரனின் முத்திரை பதிந்த - மறக்க முடியாத தமிழ்ச் சினிமாவின் காட்சிகளில் ஒன்று.
- Күн бұрын
காளியின் ரோஷம் - நினைவில் நிற்கும் முள்ளும் மலரும் படத்தின் காட்சி!
- Рет қаралды 63,495
Пікірлер: 18