நம் முன்னோர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து நூற்றாண்டு காலம் வாழ பல சூத்திரங்களையும் கலைகளையும் கையாண்டனர்...
இதில் இன்று நான் தங்களிடம் பகிரவிருக்கும் ஒரு ரகசிய முறை..
நீண்டநாள் வாழ, ஆண்மையும், பெண்களுக்கு கர்பப்பையும் பலப்பட, அதைவிட முக்கியமாக தொப்பை போடாமலிருக்க ஒரே ஒரு சூத்திரம்...
தண்டட்டி... தண்டட்டிக்கும் நூற்றாண்டு வாழ்வதற்கும், வயிறு குறையவும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் ஒரு மனிதனின் காதில் தான் பல ரகசியங்கள் அடங்கி இருக்கிறது.
"செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை"
என்று திருவள்ளுவரே கூறியுள்ளது உண்மைதானே...
சற்று யோசித்துப் பாருங்கள், தண்டட்டி போட்ட பட்டி அல்பாயுசுல போயிருக்கா??? தொப்பை பெருத்து பார்த்ததுண்டா??? குழந்தைப்பேறு இல்லாமல் இருந்ததுண்டா?
இன்றும் தண்டட்டி போட்ட பாட்டிகள் பல ஊர்களில் ஆரோக்கியத்தின் ஆதாரமாக உள்ளனர், செப்பு சிலைகளை கவனியுங்கள், உலகில் உள்ள பல பழங்குடியினரை பாருங்கள். இது இவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல...
இது ஒரு அறிவியல்... காதை இழுத்துவிட இழுத்துவிட இரு முலைகளும் தூண்டப்பட்டு மூளை செயல்திறன் கூடும், neurons உடல்முழுக்க சீராக செயல்படும் இதன் வழியே உடல் உறுப்புக்கள் பலப்படும்.
காதுகளை இழுத்து விட்டு பயிற்சி செய்யும் வழக்கம் களரி, வர்மம் போன்ற அனைத்து தமிழர் வீர கலைகளிலும் இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவனுக்கு தோப்பு கரணம் என்று ஆசிரியர் கொடுக்கும் தண்டனை அறிவு மந்தப்பட்டவனுக்கு அறிவை பெருக்கவே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏதேனும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டும் போது தோப்புக்கரணம் போட்டு வேண்டும் பழக்கத்தை பார்த்ததுண்டா? தோப்புக்கரணம் போடுவதால் நமக்கு வேண்டிய செயல் மூளையின் சரியான சிந்தனைமூலம் கிடைக்கிறது. இதற்குத்தான் இந்த தோப்புக்கரணம்.
வர்மக்கலை என்று ஒன்றை கேள்விப்பட்டதுண்டா? இந்த வர்மக்கலை சூத்திரம் என்ன சொல்லகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டாள் மேலும் வியப்பின் உச்சத்திற்க்கே சென்றுவிடுவோம். நம் உடலைக் கட்டுப்படுத்தும் நாடிகளின் பிரதான நாடி இரண்டு செவி வழியாகவே ஊடுருவி செல்கிறது. இந்த நாடியை துண்ட உச்சி முதல் உள்ளங்கால் வரை புத்துணர்ச்சி பெரும்.
இன்னும் மனம் நம்பத்தவர்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
யானைமீது அமர்ந்திருக்கும் யானைப்பாகன் அவன் கால் கட்டைவிரலை கவனித்ததுண்டா? எங்கிருக்கும்? யானையின் செவிகளுக்கு பின்னால் உள்ள ஒரு மர்ம இடத்தில். இந்த செவி குழியை வர்மத்தில் செவி குற்றி வர்மம் என்று கூறுவார்கள், இது யானையையே கட்டுப்படுத்தும். இந்த அழுத்தத்தை அதிகப்படுத்த யானை நிலைகுலையும். இது மூளையின் ஆற்றல் புள்ளி.
சரி ஒரு அனுபவ முறை ஒன்று சொல்லுகிறேன் முயற்சித்துப் பாருங்கள். இது ஆண்களுக்கு உடனே தெளிவாகத் தெரியும், பெண்களால் சில நாட்களில் உணர முடியும்.
இரு சேவைகளையும் உங்களுடைய கட்டைவிரல் மற்றும் நடுவிரலால் பிடியுங்கள், ஆல்காட்டி விறல் பயன்படுத்தக் கூடாது என்பது வர்ம சத்திரம், ஏன் என்பதை பிறகு பாப்போம்... பிடித்து விட்டிர்களா? சட்டென்று இழுத்து விடுங்கள்... உங்கள் விதைப்பையை கவனியுங்கள் ... தெரியாவிட்டால் மீண்டும் செய்து பாருங்கள்.... உங்கள் விதைப்பை சுருங்கிவிடும்... தெரியாவிட்டால் மீண்டும் முயற்சியுங்கள்.... அதிசயமாக உள்ளது அல்லவே?
இப்போது இருக்கும் நாகரிகத்தில் தண்டட்டியெல்லாம் நம்மால் போட முடியாது. நானும் உங்களை போடச் சொல்லவில்லை.
இப்படி நீங்கள் தற்போது காதை இழுத்து விட்டது போல் தினம் 10 முதல் 20 முறை காலை மாலை செய்வதன் மூலம் நம் ஆயுளை கூட்டிக் கொள்ளலாம், ஆண்மை மிகுந்தும், கர்பப்பை பலமாகவும் ஒட்டிய அழகான வயிறுடன் ஆரோக்கியமாக வாழலாம்.
மேலும் பல ரகசியங்களை உங்களோடு பகிர்ந்து மகிழுற (intro ) தொடர்ந்து தெளிவுறுவோம்.... எங்களோடு இணைந்திருங்கள்...
#healthtips #tamil #chola #tamilhealthtips #aarogyam #yoga #varmam #varmakalai
Негізгі бет காதை இழுத்தா இவ்வளவு நன்மைகளா | தண்டட்டி சொல்லும் ரகசியம்
No video
Пікірлер: 32