பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் காட்டுச் #செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் காட்டுச் #செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவில் இது ஆகும். இப்பகுதி அடர்ந்த காடாக இருந்ததாம். இருளர் இன மக்கள் புற்றில் கைவிட்டு பாம்பு உள்ளதா? என பார்க்க முற்பட்டபோது ஏதோ? ஒரு கல் கையில் பட்டதாம். எனவே புற்றை உடைத்து பார்த்தபோது அதில் அம்மன் சிலை இருந்ததாம். இதனால் இருளர் இன மக்கள் ஊரில் சென்று புற்றின் உள்ளே அம்மன் சிலை இருப்பதை கூறினார்களாம். எனவே, கிராம மக்கள் திரண்டு வந்து அந்த அம்மன் சிலையை ஊரினுள் கொண்டு சென்று வைக்க முற்பட்டார்களாம். அப்போது சிறுமி மீது அம்மன் அருள் வந்து ஊரினுள் என்னைக் கொண்டு சென்று வைக்க வேண்டும் என்றால் ஒரு அடிக்கு,ஒரு காவு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாம்.
இதனை ஏற்று கிராம மக்கள் காவு கொடுத்த வண்ணம் அம்மனை ஊரினுள் கொண்டு செல்ல முயற்சித்தார்களாம்.ஊர் எல்லையில் உள்ள காவு கொள்ளை என்ற இடத்திற்கு வந்தபோது,காவு அனைத்தும் தீர்ந்து விட்டதாம். இதனால் அம்மன் மீண்டும் எடுத்த இடத்திற்கே சென்று அமர்ந்து விட்டதாம். இதனால் இந்த அம்மனை காட்டுச் செல்லியம்மன் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.அம்மன் இருக்கும் இடத்தில் வேத கொடி உள்ளது. இது இந்த அம்மன் கோவிலுக்கு பந்தல் போன்று படர்ந்துள்ளது. இந்த அம்மன் ஏழு ஊருக்கு கிராம தேவதையாக விளங்குவதாக கூறப்படுகிறது. ''ராஜராஜ சோழனால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. அதுக்கான வரலாற்று ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க. போர் சமயங்களில், சோழ மன்னர்கள் இங்கே வந்து செல்லியம்மனைக் கும்பிட்டுத்தான் போருக்குப் போவாங்கன்னு, பெரியவங்க சொல்லுவாங்க.
#Kattu chelliamman
#Periyapalayam kattu chilliyamman
#Kattu chelliamman kovil
#Chengarai chelliamman kovil
#chenga_pictures
Негізгі бет காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில் வரலாறு
No video
Пікірлер: 16