#dharmapuri #kavachurai#thadakala Sangam#mini marathon#what happened தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட தடகளங்கள சங்கம் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக 5 கிலோமீட்டர் மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசப் பாதம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட தடகள சங்கத் தலைவர் பி எஸ் ஆர் சரவணன் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் சாந்தி அவர்கள் கலந்து கொண்டனர் இந்த ஓட்டப்பந்தயம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து துவங்கி நான்கு ரோடு சந்திப்பு.பெரியார்சிலை .எஸ்விரோடு மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வழியாக பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மினி மராத்தான் நடைபெற்றது.இந்த ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் தடகள வீரர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பங்கு பெற்றனர்.
முன்னதாக இவர்களுக்கு போதிப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்கான டீ சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும் மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் 4 முதல் 10 வரை இடம் பிடிக்கும் நபர்களுக்கு தல 500 ரூபாய் வீதம் ஆண்கள் முதல் பரிசு லோகேஷ்
இரண்டாம் பரிசு அன்பரசு
மூன்றாம் பரிசு நவின்குமார்
முதல் பரிசு சுபஸ்ரீதீபா
இரண்டாம் பரிசு குமுதா.
மூன்றாம் பரிசு .தீபிகா அவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசப் பாதம் தர்மபுரி மாவட்ட தடகள சங்க தலைவர் டி எஸ் ஆர் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையானது வழங்கப்பட்டது.
Негізгі бет காவல்துறை போதைப்பொருள் எதிர்ப்பு ஒழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்.
Пікірлер