'கணேசரனுபூதி ', composed by my father Professor L.R. Ganesan, as a ragamalika, in the ragams Naattai, Ranjani, Bhageshri, Hamsanandi, Bowli, Aabhogi and Shriragam.
Lyrics of the hymn-
கணேசரனுபூதி
----------------------------
ஓம்
தீதறு வினையிற் செப்பம்
சேர்த்திடல் வேண்டும்-எங்கள் போதக முகத்துத் தேவே!
பொன்னடி போற்றுகின்றேன்!
1.சத்தாகிய வையமனைத்திலுமே,
வித்தாயுயிராய் மனமாயறிவாய்ச்
சித்தாக நிறைந்த பரம்பொருளாம்
எத்தாலுமவன் பதமேத்துவனே!
2.வேதங்களினாதி நிலைப்பொருளாம்,
நாதங்களினுள்ளுறை ஓமெனுமோர்
தீதற்ற பயன்தரு சொல்வடிவாம்
ஓதற்கரியோன் கணநாயகனே!
3. பொன்னைப் புடமிட்டது போலுமிவண்,முன்னை வினைமாய வெனக்கருளி
என்னை நசைநீக்கி உயர்த்துவதும்
பன்னற்கரிதோர் களிறேயலவோ!
4. பஞ்சக்கரனின் பணியே பணியாய்,
நெஞ்சிற் கரவாது நினைப்பவருக் (கு)
எஞ்சும் பிறவிச்சுழலில்லை யவ
ரஞ்சும் கொடுமை என ஏதுமிலை.
5. கண்ணுக்கெதிருள்ள பருப்பொருளோ?
எண்ணத்தெளிவாலறி நுண்பொருளோ?
விண்ணோர் அறியாத விழுப்பொருளோ!
நண்ணுமனுபூதிதரும் பொருளோ!
6. நிலையற்ற பொருள் நிலையானதென
உலையாதுன துய்வழிகேள் மனனே!
மலைமாமகள் மைந்தன் திருப்பதமே
நிலையானதெனத் தெளிவாய், தெளிவாய்!
7. அகமென்னுமுணர்வு அழியாதவரை,
சகமெங்கும் நிறைந்தொரு நீக்கமறச்
சகளத்தொடு நிட்களமாகியதோர்
நிகரற்ற பொருள் புகலப்படுமோ!
8. மூலத்திலெழுந்த முதற் பொருளாம்,
தூலத்திலுறை பரசூக்குமமாம்,
ஆலத்தைமிடற்றில் அடக்கியவர்,
பாலன் வரசித்தி விநாயகனே!
9. என்னுளுயிராக விருப்பதுவே,
தன்னுளெனையோரொளியாக்கியதோ!
என்னுளதையானெனதாக்குமுனம்,
தன்னுளெனை வாரி விழுங்கியதே!
10. என்னுள் யானாகவிருப்பவனுக்
கென்னே கைம்மாறு செயத்தகுமோ!
என்னிச்சையுமிஃதிது என்செயலென்று
உன்னர்க்கினி ஏதுவும் உண்டுகொலோ!
11.கண்டாரனுபூதியிலெய்துவதும்
விண்டாரது சொல்லிலகப்படுமோ!
கண்டாரது பேசுவரோ உலகில்
விண்டாரது வாக்கும் வியர்த்தமரோ!
12. மனமென்னு மிருங்கடல் மீதெழுமோர்
இனனென்னவரும் கணநாதனையே
தினமுந்தொழுவார்க் குலகில் பெறுதற்
கினியோர்விழைவு முளதோ! உளதோ!
13. சரியை, கிரியைதரு யோகநிலைக்
குரியர்பெறவேண்டிய ஞானமெனும்
துரியப்பதமெய்த வரம் தருவோன்
ஒருவன் பெருவேழமுகத்தவனே!
14.அரியுமயனுமரனுந்தனியே
புரியுமுத்தொழிலும்
புரியுமொருவன்
கரிமாமுகனே, அடியார்க்கருளும்
கருணை முகிலன்ன உமைசுதனே!
15. பாசம், ஸ்ருணியும், கரமோதகமும்,
பூசும் திருநீறொடு பூணரவும்,
வாசம் கமழ்மாலைகளுமருகும்,
தேசுற்றநுதல் விழியுந்திகழக்
16. கொம்பின் குறையும் புரிநூலுமொளிர்
செம்பொற்சுடராம்
வடிவுமெழிலார்
லம்போதரமோடு
விளங்குமொரு
விம்ப மெனதுள்ளம்
நிறைத்ததுவே!
17. மூவா, முதலே, கதிநீயலவோ, தேவா
வெனையாண்டு கொளக் கடனே,
காவா வெனுமன்பரைக்காத்திடுமே,
பாவாணர் துதித்த பரம்பொருளே!
18. அன்பே! வருக, அருளைப் பொழிக
என்பால் என யானுமிறைஞ்சுவதன்
முன்பே எனதூறு துடைக்க, உவந்து
இன்பந்தருவானிப மாமுகனே!
19. சுருதிப் பொருளாய்த் துயர் தீர்க்குமெனக்
கருதும் பொருளாய்க் கருணைக் கடலாய்க் பெரிதிற் பெரிதாய் இறவாமை தரும்
திருவாய் வருவான் பரமேசசுதன்.
20. முன்னம் முருகன் கனியொன்று பெறப் பொன் மஞ்ஞை இவர்ந்து புறம் செலவே அன்னை உமை, தந்தை புனற் சடையன் தம்மை வலம் வந்தவன் எம் துணையே!
21. பஞ்சாக்கரன்
ஆதிசிவன் மகனாம்
பஞ்சக்கரனின்
பணிசெய்பவர்தம்
நெஞ்சத்துயர்போம
மரர்க்கரசை
விஞ்சும் பெரு
வாழ்வுமவர்
பெறுவர்!
ஓம்! ஓம்! ஓம்!
Негізгі бет கணேசரனுபூதி
Пікірлер: 54