கற்பூர நாயகியே… கனகவல்லி….
கற்பூர நாயகியே…. கனகவல்லி….
காளி மகமாயி! கருமாரி அம்மா…..
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….
[நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!] (2)
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….
[காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!] (2)
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்! (2)
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை! (2)
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….
கருமாரி அம்மா!
கருமாரி அம்மா!
Негізгі бет கற்பூர நாயகியே கனகவல்லி ....
Пікірлер