எஸ்.ஆர் அவர்களின் கற்பனை சேவல் கதை மிக அருமை. முடிவு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விறு விறுப்பாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றின் மீது வெறி இருக்கும். அது குடும்பத்தையே சிதைத்தாலும் அதை பற்றி கவலை படாமல் அவர்கள் வாழ்க்கை போய் கொண்டே இருக்கும். அனைத்தையும் இழந்த பிறகு தான் புரியும். பித்து பிடித்தது போல் அலைவார்கள். இது கடந்து போன அவர்கள் உறவுகளுக்கு கொடுத்த பாவத்திற்கான தண்டனை. ஆறுதல் சொல்ல உடன் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த கதையை சே.சிவகுமார் அவர்களின் வாசிப்பில் இருக்கும் அர்த்தம் நிறைந்த வரிகளை கேட்ட பிறகாவது திருந்தட்டும். கற்பனை சேவலாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வேறு கெட்ட பழக்கம் இருந்தாலும் உறவுகளை விற்று கெட்ட பழக்கங்களை விலைக்கு வாங்க வேண்டாமே. எஸ். ஆர் அவர்களுக்கும், அற்புதமாக வாசித்த s.sivakumar அவர்களுக்கும் நன்றி பாராட்டுக்கள். வேறு பல கதைகளை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறோம்.
Пікірлер: 24