கடல் கடந்து சென்றாலும்
தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை - நீ
கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நான் இருப்பேன் - 2
அஞ்சாதே கலங்காதே (கடல் கடந்து சென்றாலும்)
தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை
உயர்ந்தது அவராலே - 2
பால் இணைந்தூட்டிடும் தாய் மறந்தாலும்
நீ அவர் மடி மேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார்
வாழ்வினில் ஒளிதானே - அஞ்சாதே
பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார் -2
பார்வை இழந்தவர் வாய் திறவாதோர்
யாவரும் நலம் அடைவார்
இறை ஆட்சியில் அவர் மாட்சியில்
மானிடம் ஒன்றாகும் - அஞ்சாதே
Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
- Tamil Christian Devoltionals team
Негізгі бет kadal kadandhu (கடல் கடந்து சென்றாலும்) with lyrics - C Major
Пікірлер: 712