#கொலு பொம்மைகள் #கண்காட்சி 2022 ..
நவராத்திரி கொலு பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது சென்னை குறளகத்தில்..
#காதிகிராப்ட்
சென்னை, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணாசாலை, காதி கிராமோத்யோக் பவனில் கொலு பொம்மை கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் வாழும் கைவினைஞர்கள் வளர்ச்சிக்காக, சென்னை, காதி கிராமோத்யோக் பவன், முன்னாள் முதல்வர் காமராஜரால், 1957ம் ஆண்டு துவக்கப்பட்டது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணாசாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில், கொலு பொம்மை கண்காட்சி துவங்கியது.காதி கிராமோத்யோக் பவன் மேலாளர் சுந்தர் கூறியதாவது:காதி கிராமோத்யோக் பவனில், 1967ம் ஆண்டு, பொம்மை கொலு கண்காட்சி துவக்கப்பட்டது. முதல் ஆண்டு, 50 ஆயிரம் ரூபாயாக இருந்த விற்பனை, தற்போது 90 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.இக்கண்காட்சியில், ஆறுபடை வீடு முருகன், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரங்கள், 12 ஆழ்வார்கள், 18 #சித்தர்கள், 27 வகையான ராமாயண செட்டுகள், 63 நாயன்மார்கள், வாராகி, பிரம்மாண்ட கும்பகர்ணன் உட்பட, பல மாநில பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அத்திவரதர், நாமக்கல் லட்சுமி, பிரத்தியங்கரா தேவி, கிருஷ்ணர் துலாபாரம், காஞ்சி வரதர், பைரவர் உள்ளிட்ட சிலைகள் பார்வையாளர்கள கவர்ந்துள்ளன. பொம்மை ரகங்கள், 100 ரூபாயில் இருந்து ௧ லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
Негізгі бет கொலு பொம்மைகள் கண்காட்சி 2022|| சென்னை குறளகம் ||
No video
Пікірлер: 2