வணக்கம்
நான் குளச்சல் மீனவன்
19/03/2024 அன்று நள்ளிரவு தூத்துக்குடி பகுதியில் 6 விசைபடககுகளில் 86 மீனவர்கள்,(கன்னியாகுமரி மாவட்டம்)குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தூத்துக்குடி மீனவர்கள் எங்கள் விசைபடகுகளை சேதப்படுத்தி எங்கள் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கி, விலையுயர்ந்த GPS கருவிகளை ஆழ்கடலில் தூக்கி வீசினர், பின்பு எங்கள் விசைபடகுகளையும் எங்கள் மீனவர்களையும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு எங்கள் மீனவர்களை வெளிநாட்டு அகதிகள் போல ஓர் அறைக்குள் அடைத்து வைத்தனர்.பின்பு நாங்கள் 6 விசைபடகுகளில் இரவும்,பகலுமாக கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை தூத்துக்குடி மீனவர்கள் எடுத்து சென்றனர்.காயபட்ட மீனவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் எங்களையும் எங்கள் மீனவ சமுதாயத்தையும்,மீனவ குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளன.எங்களை காயப்படுத்திய தூத்துக்குடி மீனவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தூத்துக்குடியிலிருந்து குளச்சல் மீனவர்களையும், மீனவர்களின் விசை படகுகளையும் மீட்க கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை இதற்கான ஓர் தீர்வு கிடைக்கவில்லை.(#Pleaseshare)
நன்றி.
Негізгі бет குளச்சல் மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மீது தூத்துக்குடி மீன்பிடி படகுகள் தகுதல்😞
Пікірлер: 18