சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, தச்சூரிலிருந்து பழவேற்காடு-பொன்னேரி சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த சமயத்தில் பூமியைச் சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது வழிபட்ட தலமாகும்.
இத் தலத்தில் உள்ள சிவனை அகத்தியர் வணங்கியதன் காரணமாக மூலவர் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்மன் ஆனந்தவல்லியம்மன். கோயில் பிரகாரத்தில் பழமையான புற்று ஒன்று காணப்படுகிறது. இங்கு அகத்திய தீர்த்தக்குளம் உள்ளது. இக் கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலை உடையது. தைப்பூசத்தையொட்டி இங்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
இக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சிவராத்திரி, கந்த சஷ்டி, சனி பிரதோஷம் போன்ற நாட்களில் விசேஷமான சிறப்புப் பூஜைகள் நடைபெறும். திருமணத் தடை நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க அகத்தீஸ்வரரிடம் வேண்டிக் கொள்கின்றவர்கள்.
Негізгі бет ஆலய தரிசனம் (அகத்தீஸ்வரர் திருக்கோயில் - பொன்னேரி )
Пікірлер