சென்னை விமானநிலையத்துக்கு வந்து இறங்கினார் ராஜீவ் காந்தி. அங்கு நிருபர்களுக்கு அரை மணி நேரம் பேட்டி தந்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டார்.
ராஜீவின் கார் கிண்டியில் நேரு சிலை இருக்கும் கத்திப்பாரா அருகே காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்டது. காரை விட்டு இறங்கி அவர்கள் தந்த மாலைகளை, கைத்தறி ஆடைகளை அன்போடு வாங்கிக்கொண்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் செல்லும் வழியில் நந்தம்பாக்கத்தில் தொண்டர்கள் மீண்டும் வழிமறிக்க, அங்கு இருந்த மைக்கில் “தமிழக மக்கள் என்னை இப்படி அன்போடு வரவேற்பதற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல அரசு அமைய கைச் சின்னத்திலும், இரட்டை இலைச் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Негізгі бет மே-21, ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது? - Vikatan Exclusive | Rajiv Gandhi
Пікірлер: 1,1 М.