கவிஞர் முடியரசன் அவர்கள் எழுதிய தமிழ் உணர்ச்சி என்னும் கவிதைக்கான எளிமையான விளக்கம் இங்கே வழங்கப்பட்டுள்ளது
#filmora #tamil #tamilliterature #tamiloldsongs #tamilpoetry #tamilnadu #semmozhi #tamilstatus #kavithai #tanilbook #new #newbook #newtamil
#filmora #filmoramobile
மொழியுணர்ச்சி-முடியரசன்
எண்சீர் விருத்தம்
1
இலைபொறுக்கும் நாயுடன் தன் திறமை காட்டி எச்சிலுணும் மனிதனெனும் உருவங் கண்டும், குலைநடுங்கப் பெண்ணினத்தை அடிமை யாக்கும் கொடுமையினைக் கண்மூடிப் பழக்கந் தன்னை நிலைநிறுத்தப் பாடுபடும் நிலைமை கண்டும். நேர்மைபகுத் துணரறிவு கல்வி இல்லா நிலையிருக்கக் கண்டிருந்தும் உணர்ச்சி காணா நெஞ்சத்தார் மிக்குவரும் நாளில் இங்கு
2
மொழியுணர்ச்சி பாடுகென் றீர் ! உணர்ச்சி கூர்ந்து மொழியுங்கால் பிழைபொறுத்துச் சிந்தித் தாய்ந்தால் பழியுணர்ச்சி தோன்றாது; வருவோன் செல்வோன் பழிக்கின்றான் நம்மொழியைச் செவிமடுத்தும் எழுமுணர்ச்சி கண்டோமா? வடக்கு வேந்தன் இழித்துரைத்தான் தமிழரசை எனுஞ்சொற் கேட்டு முழுமூச்சாய் எதிர்த்தானே அவன்கு லத்து முளைத்துவரும் காளைகள் நாம் வெட்கம் வெட்கம்
3.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி? ஆட்சி மன்றில் பாங்குடன்வீற் றிருக்குமொழி தமிழே என்று பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும்; சங்கதற்கா என்செய்யப் போகின் றீர்நீர்? இளைஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன்றும்
4
ஆந்திரமும் கன்னடமும் சென்று வந்தேன் அங்கெல்லாம் மொழியுணர்ச்சி விளங்கக் கண்டேன், மாந்தரெனத் திரிகின்றோம் உணர்ச்சி யற்று வந்தவர்க்கும் போனவர்க்கும் பல்லைக் காட்டிச் சாந்துணையும் காக்கைபிடித் தலைந்து சென்று சாப்பாடே குறிக்கோளாய் மொழியைத் தாழ்த்தி வாழ்ந்திருக்க நினைக்கின்றோம் படையெடுத்து வந்தமொழி வாழவழி செய்து தந்தோம்
5
பிறமொழியை வெறுக்கின்றேன் என்று சொல்லிப் பிழையாகக் கருதாதீர் ! தமிழை யிங்கு மறுவறநன் குணர்ந்ததற்பின் பயில்க என்பேன் ; மனைவியைமற் றொருவன்பால் அடகு வைத்துத் துறவறமேற் கொளலாமோ? தாய்த வித்துத் துடித்திருக்க அறஞ்செய்ய முனைதல் நன்றோ? கறவையிடம் பால்கறந்து கன்றுக் கின்றிக் கதறிவிழக் கடவுளென்று சிந்தல் நன்றோ?
6
மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை மாய்க்கின்றோம்; மொழியிருக்கப் 'பாஷை' என்போம்,
பெறுமகிழ்ச்சி ‘சந்தோஷம்' ஆகும்; வேட்டி 'வேஷ்டி' எனப் பெயர்மாறும்; பதற்றம் என்னோம்
மறுமொழிபோல் பதஷ்டமெனக் குதிப்போம்; தண்ணீர் ஜலமாகும்; மறைக்காடு 'வேதா ரண்யப்'
பிறமொழியாய் மாறிவிடும்; மொழியு ணர்ச்சி பிழைத்திருக்க இடமுண்டோ? புதைத்து விட்டோம்
7.வணக்கமெனச் சொல்பவரைக் கட்சி சார்த்தி வாட்டுகிறோம்; "தாய்மொழியைப் புதைத்து விட்டுப் பிணக்கல்லில் வரவேற்பு நல்கல் வேண்டேன் பிறமொழியின் அடிமைகளே” என்று சொன்ன குணக்குன்றாம் நம்காந்தி எந்தக் கட்சி? குறிக்கோளாய் வங்கமொழி வளர்ப்பான் வேண்டிப் பிணக்கின்றிப் பலநூல்கள் தந்த தாகூர் பேணினரே மொழியுணர்ச்சி எந்தக் கட்சி?
8
தமிழ்மொழியை உயர்தனிச்செம் மொழியாம் என்று தகுமுறையில் ஆராய்ந்து முடிவு சொன்ன தமிழ்மகனார் பரிதிமாற் கலைஞன் என்று தமிழ்மொழியிற் பெயர்கொண்டார் எந்தக் கட்சி?
*அமுதமெனத் தாய்மொழியைப் போற்றும் நாடு வீழ்ந்ததில்லை, அதைத்தூற்றி வாழ்ந்த நாடும் தமதறிவிற் கண்டதில்லை” என்று ரைத்த தமிழாசான் முத்துசிவன் எந்தக் கட்சி?
9.
மணவினையில் தமிழுண்டா? பயின்றார் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டா? மாண்ட பின்னர் பிணவினையில் தமிழுண்டா? ஆவ ணத்தில் பிழையோடு தமிழுண்டு; கோவில் சென்றால் கணகணவென் றொலியுண்டு; தமிழைக் கேட்கக் கடவுளரும் கூசிடுவர்; அந்தோ! அந்தோ! அணுவளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில் ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வ தெங்கே?
10
உடுக்கின்றார் உண்கின்றார் உயர்வுங் கொள்வார் ஒப்பற்ற தமிழ்மொழியால்; நன்றி இன்றிக் கெடுக்கின்றார் அதன்வளர்ச்சி நேராய்ச் சில்லோர்; கேண்மைகொண்டு வளர்த்திடுவோம்என்றுசில்லோர் கொடுக்கின்றார் நஞ்சு தனைக் கூசா திந்தக் கொடுமைகளை நீக்கிடவே ஆவி தானும் விடுக்கின்றோம் தாய்மொழிக்கே என்று சொல்லி வீறுற்று கிமிர்ந்தெழுவீர் தமிழ்நாட் டீரே!
11.
தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும் தமிழ்கொன்று வாழ்கின்ற கயமை வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும் தடுமாறி ஓடிவிடும் எலிகள் வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யச் சிங்கம் வேண்டும் தாளமிடும் ஓலமிடும் நரிகள் வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்ய மானம் வேண்டும் தாலமுத்து நடராசன் துணிவு வேண்டும்
Негізгі бет மொழி உணர்ச்சி- முடியரசன்/tamil mozi unarchi kavithai meaning in tamil/mudiyarasan kavithaigal
Пікірлер: 23