#poigaiaazvar
#bhooththazvar
#peiaazvar
#mudhalaazvargal
#பொய்கையாழ்வார்
#பூதத்தாழ்வார்
#பேயாழ்வார்
#முதலாழ்வார்
#நாலாயிரதிவ்யபிரபந்தம்
பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியின் முதல் பாசுரம்:
பாடல்-1
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
விளக்கம்
உலகத்தை விளக்கு ஆகவும் (அகல்), அந்த விளக்கிற்கு நெய்யாகக் கடலையும் ஒளியாகக் கதிரவனையும் வைத்து மாலையாகப் பாசுரங்களைத் திருவடிகளுக்கு அணிவிக்கின்றார் பொய்கையார். எதற்காக என்றால் துன்பக்கடலில் இருந்து நீங்குவதற்காக என்கின்றார்.
பூதத்து ஆழ்வார் முதல் பாசுரம்
பாடல்-1
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
விளக்கம்
இப்பாசுரத்தில் அன்பு என்னும் விளக்கு ஆர்வம் என்னும் நெய் ஊற்றப்பட்டு, மனம் என்னும் திரி இட்டு ஞானம் என்னும் சுடர்விளக்காக ஏற்றப் படுவதாகப் பாடுகின்றார் ஆழ்வார்.
இறைவனை எங்கும் தேட வேண்டாம். உன்னிடம் உள்ளான்; உள்ளத் தூய்மையால் மனம் உருகி அவனை நினைத்து வழிபடுங்கள் என்பதை இறைத் தொண்டர்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எடுத்தோதினர்.
பேயாழ்வாரின் முதல் பாசுரம்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்; திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்; - செஆக்கிளரும் பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கண்டேன்; என் ஆழி வண்ணன்பால் இன்று.”
விளக்கம்
திரு . இலக்குமி; அருக்கன் - சூரியன்; செருகிளரும் - போரில் வல்லமை காட்டும்; ஆழி - சக்கரம்: ஆழி வண்ணன் - கடல் நிறத்தவன்; பேயாழ்வார் முதன் முதலாகப் பெரிய பிராட்டியாரின் அருள் வடிவத்தைக் காண்கின்றார்; பொன்மேனியை யுடைய அன்னை யாருடன் கூடிய எம்பெருமானின் மரகதத் திருமேனி இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக் கினறது. மரகத மலையில் உதித்து ஒளிவீசி வரும் இளஞாயிறு போலத் தோன்றி இருவரது ஒளியையும் - பொன் ஒளியும் மரகத ஒளியும் கலந்து ஒளிர்கின்ற அந்தக் கலப்பு ஒளியையும்-காண்கின்றார்; திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் என்பதால் இது பெறப்படு கின்றது.
Негізгі бет Ғылым және технология முதல் ஆழ்வார்கள் || பொய்கை ஆழ்வார் || பூதத்தாழ்வார் ||பேயாழ்வார் || Audio Book
Пікірлер: 18