இசை :தேவா
பாடகர் :SPB, ஜானகி
படம் :சாமுண்டி
பாடல் :முத்து நகையே
கவிஞர் :வாலி
நடிகர்கள் :சரத்குமார், கனகா
முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடி மலரே{2}
கண் இரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னை தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடி மலரே
இன்னும் பல பிறவிகள்
நம்முடைய உறவுகள்
வாழும் தொடர் கதை தான்
உந்தன் நேசம் வளர் பிறை தான்
முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடி மலரே
ஒன்ன பாத்து ஆச பட்டேன்
அத பாட்டில் சொல்லி புட்டேன்
நீயும் தொட நானும் தொட
நாலு வகை அது கூச்சமிட
அட்டை போல ஒட்டி இருப்பேன்
இந்த காதல் பொல்லாதது
ஒரு காவல் இல்லாதது
ஊதகாத்தில் வஞ்சி மாது
ஒத்தையில வாடும் போது
போர்வை போல பொத்தி அணைப்பேன்
ஆறேழு நாளாச்சி விழி மூடி
அடி ஆத்தாடி அம்மாடி உனை தேடி
நீதானே மானே என் இளஞ்ஜோடி
உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
நித்தம் தவித்தேன்
நீ வரும் வரைக்கும்
முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடி மலரே{2}
புள்ளி மானு பெண்ணானதா
கெண்ட மீனு கண்ணானதா
பூ முடிச்சி பொட்டு வச்சி
புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
அட வாயா கைய தொடு
பள்ளி பாடம் கத்து கொடு
ஆவணியில் பூப்படஞ்ச
தாவணிய போட்டு கிட்ட
சின்ன பொண்ண ஆசை விடுதா
ஆவாரம் பூ வாட விடுவேனா
ஒரு அச்சாரம் வெய்க்காம இருப்பேனா
தேனாறும் பாலாறும் கலந்தாச்சு
அன்பு நாளாக நாளாக வளந்தாச்சு
என்ன படச்சான்
நீ துணை வரத்தான்
முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடி மலரே{2}
கண் இரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னை தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடி மலரே
Негізгі бет Mutthu nagaiye |முத்து நகையே | lyrics | SPB & Janaki | Deva | Sarathkumar & Kanaga |
Пікірлер: 185