🌸கண்ணன் பாடல் 🌸
(நூறு வருஷம் பாடல் மெட்டு)
கண்ணன் அவனின் பெயர் சொல்லித்தானே நாமும்
மண்ணின் மீதிலே நல்லா வாழுறோம்
கிருஷ்ணன் என்ற பெயரை உச்சரிக்க வேணும்
தோஷங்களும் நீங்கிடவே பாடணும்
காலை மாலை நினைத்திடவே கையெடுத்து கும்பிடவே
பூஜை எல்லாம் செய்திடவே
கேசவன் தான் நம்மையே காத்திடுவான்
கண்ணன் அவனின் பெயர் சொல்லித்தானே நாமும்
மண்ணின் மீதிலே நல்லா வாழறோம்
பக்தி செலுத்திட அன்பும் தான் ஊறும்
சேவை செய்திட மனசாட்சி பேசும்
நன்மை செய்திடவே
நம்மைத்தான் தூண்டும்
வழியே மாறாமல் நம்மை தான் காக்கும்
நாராயணா என்றே நாளும் சொல்லிடவே நமனும் நம்மை விட்டே சென்றிடுவான் பாரு
பேரைச் சொல்லி நீயும்
தொழுது வரும் போது
பாவம் நீங்கும் இங்கே கலிகாலம் தானே அறத்தின் வழியே நாமும் சென்றாலே
அன்பும் பண்பும் உன்னுள் இணைந்தாலே
இந்த சம்சாரத்தின் சாகரத்தை கடந்திடவே வைக்கும்
கண்ணன் அவனின் பெயர் சொல்லித்தானே நாமும் மண்ணின் மீதிலே நல்லா வாழுறோம்
கிருஷ்ணன் என்ற பெயரை உச்சரிக்க வேணும் தோஷங்களும் நீங்கிடவே பாடனும்
குசேலர் கண்ணனையே பார்க்கத்தான் போனார்
சுசிலை கொடுத்த கொஞ்சம் அவலோடு தானே
கண்ணன் எடுத்துக் கொண்டார் சுதாமா அவலை
ஒன்று இரண்டு பிடி போட்டாரே வாயில்
அதற்கே வேண்டியது அனைத்தும் கிடைத்துவிட
லக்ஷ்மி தடுத்தேதான் தானும் அதை கொண்டார்
இதையெல்லாம் அறியாத சுதமா வீடு சென்றார்
பிறகு தான் கண்ணனின் கருணையை அறிந்தார்
சொத்து வீடு வாசல் எல்லாமே
பக்தன் கடனை தீர்க்க கிடைத்த வரம் தானே -அட கண்ணன் என்னும் கடவுள் என்றும் கடனாளி ஆகாரே
கண்ணன் அவனின் (கண்ணா.. கண்ணாகண்ணா)பெயர் சொல்லித்தானே நாமும் மண்ணின் மீதிலே நல்லா வாழறோம்
கிருஷ்ணன் என்ற பெயரை உச்சரிக்க வேண்டும்
தோஷங்களும் நீங்கிடவே பாடணும்
காலை மாலை நினைத்திடவே கையெடுத்து கும்பிடவே
பூஜை எல்லாம் செய்திடவே
கேசவன் தான் நம்மையே காத்திடுவான்
கண்ணன் அவனின் பெயர் சொல்லித்தானே நாமும் மண்ணின் மீதிலே நல்லா வாழுறோம்
Негізгі бет நூறு வருஷம் மெட்டில் கண்ணன் பாடல்
Пікірлер: 15