நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | Karya Siddhi Mantra | காரிய சித்தி வசிய மூல மந்திரம்
வசிய மூல மந்திரம்:
"ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"
Vasiya Mantra in Tamil:
"ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"
"உரையான உலகத்தோர் செபங்கள் செய்ய
உரைக்கிறோம் புலத்தியனே உண்மையாக
மரையான செபமணிதான் சொல்லக்கேளு
மனிதர்களி லஷ்டதொழிலாடு வோர்க்கு
கரையான வசியமடா வாலைவாலை
கண்மணியே ருத்திராட்ச மணியேகேளு
அரையான நூற்றியெட்டு மணிதானாகும்
அப்பனே ஆறுமுக மிருக்கச் செய்யே."
- அகத்தியர் -
"செய்யப்பா செகப்பு நூல்பட்டதாகும்
செயலான யிழையாறு முறுக்கி நீதான்
உய்யப்பா ருத்திராட்ச மணியதனிற்கோர்த்து
ஓகோகோ லெட்சமுரு வசியஞ்செய்தால்
அய்யப்பா அஷ்டவசியந் தானாகும்
அருளினோம் வசியமணி அடைவாகத்தான்
நையப்பா வசிய மென்னால் சொல்லப்போமோ
நாவதனால் சொல்வதற்கு வாயில்லையே."
- அகத்தியர் -
ஆறு முகங்களை உடைய 108 உருத்திராட்ச மணிகளைக் கொண்டு மாலை தயாரித்திட வேண்டுமாம். இந்த மணிகளை கோர்பதற்கு அடர்த்தியான சிவப்பு நிறத்தினால் ஆன பட்டு நூல் பயன்படுத்திட வேண்டும் என்கிறார். இப்படி தயாரிக்கப் பட்ட மாலையைக் கொண்டு வசிய மூல மந்திரத்தினை ஒரு லட்சம் தடவை கவனக் குவிப்புடன் செபிக்க அட்ட திக்குகளும் வசியமாகுமாம். உலகத்தில் தொழில் செய்வோர் அனைவருக்கும் உகந்த செபம் என்கிறார் அகத்தியர். இந்த செபத்தினை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் செபிக்கலாம்.
This Video is about Agathiyar Vasiya Mantra in Tamil and Meditation method to achieve Success/goals in life.
This simple method involves 108 Rudraksha Mala to be used for meditation and a simple Mantra to be recited.
Негізгі бет நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | காரிய சித்தி வசிய மூல மந்திரம்
Пікірлер: 287