ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் விறுவிறு - அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை ரோடில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பில் ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்,
ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தில் முதன்மை மருத்துவ வளாக கட்டடம் தரைத்தளம் மற்றும் ஆறு தளம் வரை 2,17,071 சதுர அடி பரப்பளவிலும், தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கதிா் இயக்க துறை மற்றும் மருந்தகமும், முதல் தளத்தில் புறநோயாளிகள் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சைப் பிரிவு, இரண்டாம் தளத்தில், டயாலிசிஸ் பிரிவு, முதியோா் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள், பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும், மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, மருந்து சிகிச்சைப் பிரிவு, தனி கவனிப்பு பிரிவு, நான்காம் தளத்தில் ஆண்களுக்கான உயா் சாா்பு சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, மருந்து சிகிச்சைப் பிரிவு, தனி கவனிப்பு பிரிவு, ஐந்தாம் தளத்தில் ஐந்து அறுவை சிகிச்சை அரங்கம், பெண்கள் மீட்பு பிரிவு, ஆண்கள் மீட்பு சிகிச்சைப் பிரிவு, மருத்துவ மற்றும் செவிலியா் அறையும், ஆறாம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனி சிகிச்சைப் பிரிவு, பெண்கள் சிகிச்சைப் பிரிவு, தலைமை மருத்துவா் அலுவலகம், கூட்ட அரங்கு, மருத்துவ பதிவு அறையும், மேலும் 14,280 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சமையல் கூடம், மத்திய கிருமி நீக்கப் பிரிவு மருந்து கிடங்கு, பணியாளா் ஓய்வு அறைகள் ஆகியவை கட்டப்பட உள்ளன.இதற்கான பணிகள் துரித உடன் நடைபெற்று வருகிறது அதை ஆய்வு செய்யும் விதமாக ஜூலை நான்காம் தேதி காலை 10 மணி அளவில் கட்டுமான குழு அதிகாரிகள் தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
Негізгі бет ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் விறுவிறு - அதிகாரிகள் ஆய்வு
Пікірлер: 1