#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu
ஒகேனக்கல் காவிரிஆற்றில் நீா்வரத்து 50ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு,கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து 61 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கபினி அணையில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 61,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது அணைக்கு வரும் நீரின் அளவு 49334கன அடியாக வெளியேற்றப்படுகிறது கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது அணைக்கு வரும் நீரின் அளவு 44 ஆயிரத்து 617 கன அடியாக உள்ளது அணையின் நீர் மட்டம் 116 அடியாக உள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக எல்லை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 45000 ஆயிரம் கன அடியாகவும் நண்பகல் நிலவரப்படி 5 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து நீர்வரத்து ஐம்பதாயிரம் கன அடியாகஉள்ளது. நாளை நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து காரணமாக நான்காவது நாளாக நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதி மற்றும் ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவும் பரிசில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலாத்தளம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. #Hoganakkal ,#hoganakkalinflow,
"The Karnataka state's Kabini dam has released 61,000 cusecs of water, which is expected to reach Tamil Nadu soon. Due to the continuous rainfall in Karnataka, the Kabini and Krishnaraja Sagara dams are filling up. As of 8 am today, 61,200 cusecs of water has been released from Kabini dam, and 49,334 cusecs of water has been released from Krishnaraja Sagara dam. The water level in the dam is at 116 feet. The water released from the dams is expected to reach Tamil Nadu's border tomorrow or the day after tomorrow. The water flow in the Kaveri river at Hogenakkal has increased to 50,000 cusecs today, and is expected to further increase tomorrow. Due to the increased water flow, the district administration has banned bathing and boating in the Hogenakkal area, leaving tourists stranded."
Please note that cusecs (cubic feet per second) is a unit of measurement for water flow.
Негізгі бет ஒகேனக்கல் காவிரிஆற்றில் நீா்வரத்து 50ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Пікірлер: 3