ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ:
பாம்பன் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி கோவில் பதிகம், வேண்டியதை வேண்டியப்படியே அருளும் திருப்பதிகம், காலை மாலை பக்தியுடன் முறையே பாராயணம் செய்ய முருகன் திருவருளும், பாம்பன் சுவாமிகள் குருவருளாளும் நினைத்தது நடக்கும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் குடி கொண்டு இருக்கும், சண்முகமூர்த்தி திருக்கோவில் பராமரிப்பு குறையை பாம்பன் சுவாமிகள் கண்டு உள்ளம் வருந்தினார். இத்திருப்பதிகம் 1895 ஆடி மாதம் 28ஆம் தேதி பாடியருளினார். அடுத்த வருடமே முருகன் சன்னதி நன்கு பராமரிப்பு செய்து இருந்ததை மனம் மகிழ்ந்த சுவாமிகள் இந்த தகவலை தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கலியுகம் 4997 மன்மத (கி.பி..1895) ஆடி மாதம் 28ஆம் தேதி ஆதிவாரம்
பதிகம் பாடியவர் மு சௌம்யா ராகேஷ் குமார்
Stotram sung by M Sowmya Rakesh Kumar
சீருடை யாரியனே யெனைச் சேர வணைப்பவனே
ஏருடை வானவர்க ணித மேத்தும் பராபரனே
ஆருடை வேலவனே நெல்லை யப்பர் விமானமுறை
நாருடை யோமயனே யென்ற னாட்டத்தைப் பூர்த்திசெய்யே. 1
கச்சணி மாமுகையாள் குறக்காரிகை காவலனே
சொச்சமெய் யோகருளந் தனிற் சொந்தப்பட் டுள்ளவனே
அச்சமில் சிற்பரனே நெல்லை யப்பர் விமானமுறை
எச்சமி லெம்பரனே யென தெண்ணத்தைப் பூர்த்திசெய்யே. 2
ஏத்தி யிறைஞ்சுபவர் மிகை யேக வருள்பவனே
கோத்திர மற்றவனே குணக் கூறிணை கூறவொண்ணா
ஆத்தும நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை
ஊத்தையில் சேயவனே யென துள்ளத்தைப் பூர்த்திசெய்யே. 3
உம்பரைத் தொண்டு கொளுங் கனவுத்தி பெருக்குடையாய்
எம்பெரு மானெனவே நித மேத்துநர் பங்குடையாய்
அம்பர வேதியனே நெல்லை யப்பர் விமானமுறை
செம்பர வேலுடையா யென்றன் சிந்தையைப் பூர்த்திசெய்யே. 4
கங்கையுங் கொன்றையு மார் கிடைக்கண்ணுத லானவொரு
சங்கர னார்குமரா வந்தச் சங்கர னாரிறைவா
அங்கத மற்றவனே நெல்லை யப்பர் விமானமுறை
புங்கவ னேகுகனே யென்றன் புந்தியைப் பூர்த்திசெய்யே. 5
கான மலர்க்குழலி தெய்வ குஞ்சரி காவலனே
தானவர் மாபுரியைச் சல ராசியான் மூடிவிண்ணோர்
ஆனவர்க் காக்கமிட்டோய் நெல்லை யப்பர் விமானமுறை
நூனமில் வேதியனே யென்ற நோக்கத்தைப் பூர்த்திசெய்யே. 6
பத்தருட் புத்தமுதே யெங்கள் பாக்கியப் பொக்கிஷமே
சித்தெனுஞ் சத்திதனை யொரு துண்டத்திற் சேர்த்துளனே
அத்தனே யற்புதனே நெல்லை யப்பர் விமானமுறை
நித்தனே சண்முகனே யென்ற னெஞ்சத்தைப் பூர்த்திசெய்யே. 7
பூவளங் கொண்டொழுகச் சிவ புண்ணியந் தான்றழைக்கத்
தாவற வேதினமு நல்ல தாம்பிர வன்னியெனும்
ஆவகை தான்பெருகு நெல்லை யப்பர் விமான முறை
வீவி லயிற்கரனே யென்றன் வேண்டலைப் பூர்த்திசெய்யே. 8
சந்ததம் வந்திப்பவர் பத்திச் சாலத்திற் சிக்கிக் கொளுஞ்
செந்திரு வன்புடையா யுமை செல்வச் செழும் பொருளே
அந்தரர் நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை
நந்தலி லெம்பெருமா னென்றன் ஞானத்தைப் பூர்த்திசெய்யே. 9
சங்கையி லுன்புகழைத் தினஞ் சாற்றிய வெந்தைபிரான்
இங்கெனை யுய்வித்தவ ருனை யன்றி யெவருளரால்
அங்கியின் மேனியனே நெல்லை யப்பர் விமானமுறை
பங்கமி லாயெனது வழி பாட்டினைப் பூர்த்திசெய்யே. 10
திருநெல்வேலி கோவில் பதிகம் முற்றிற்று!
#murugan
#murugansongs
#pambanswamigal
#பாம்பன்சுவாமிகள்
#devotional
#devotionalsongs
#செவ்வாய்க்கிழமை
#muruganbakthisongs
#muruganbhaktisongs
#murugasaranam
#thirupugazh
#திருப்புகழ்
#tirunelvelikovilpathigam
#திருநெல்வேலிகோவில்பதிகம்
#tuesdaybhaktisongs
#tuesdaymorning
#tuesdayprayer
#kandhasashtikavasam
#skandagurukavasam
#kandhasasti
#கந்தசஷ்டி
#கந்தசஷ்டிகவசம்
#கந்தகுருகவசம்
#கந்தர்அலங்காரம்
#கந்தன்
#முருகன்பாடல்
#முருகன்பக்திபாடல்
#முருகன்
#சண்முககவசம்
#சஷ்டிவிரதம்
#சஷ்டி
#kandha_sashti_festival
#தேய்பிறை
#தேய்பிறைசஷ்டி
#குமரவேல்
#குமரன்
#குமாரஸ்தவம்
#lordmurugablessings
#bhakti
#bhaktisong
#bhaktibhajan
#bhaktisongs
#murugajayanthi
#velvelmuruga
#vetrivelmuruganukuarogara
#vetrivelmuruga
#aarupadaiveedu
#subramanyaswamysongs
#subramanianswamy
#tiruthanigai
#tirutanimurugan
#padalgal
#stotram
#stotrasforgoodhealth
Негізгі бет பாம்பன் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி கோவில் பதிகம்
Пікірлер