கடலூர் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, திரு திருமலை அவர்கள், சமவெளியில் கூட பல வகையான மரங்களில் மிளகு சாகுபடி செய்து, அதிக மகசூல் மற்றும் லாபம் ஈட்டி அசத்துகிறார். அவர் பனை, முந்திரி, தென்னை, பாக்கு, கிளைரிசிடியா, டிம்பர் மரங்கள் என பல வகையான மரங்களில் கூட மிளகு சாகுபடி செய்து, அதிக வருமானம் பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரின் அனுபவ பகிர்வை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
கருப்பு தங்கமாம் மிளகு சாகுபடியில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி ஜொலித்து வரும் நம் அனுபவமிக்க விவசாயிகள், “சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே", எனும் களப்பயிற்சியை வழங்குகின்றனர். இதில் கலந்து கொள்ள இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவும் forms.gle/Qtyz... அல்லது 94425 90079 என்ற எண்ணை அழைக்கவும்.
முன்பதிவு அவசியம்.
நாள்: 20.02.2022
நேரம்: 9:00 am - 4:00 pm
இடம்: வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி
சமவெளியில் மிளகு சாகுபடியின் சிறப்பம்சங்கள்:
● சமவெளியில் கூட அதிக மகசூல்
● ஊடு பயிர்களுள் அதிக வருமானம் தரக்கூடியது
● பராமரிப்பது எளிது
● பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கிடையாது
■ சமவெளியில் மிளகில் அதிக விளைச்சல் எடுப்பதற்கான தொழில் நுட்பங்களும் இப்பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
Негізгі бет பல வகை மரங்களில் அதிக லாபம் ஈட்டும் மிளகு சாகுபடி; சமவெளியில் சாதிக்கும் விவசாயி!
Пікірлер: 28