D.A.Joseph brings out the beauty in the 10 pasurams of Periyalwar inwhich he becons Baby Krishna for flower ornamentation.
முதல் ஆயிரம் | பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி |
பூச் சூட்டல்
181 ஆனிரை மேய்க்க நீ போதி
அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)
182 கரு உடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும்
உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா
திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)
183 மச்சொடு மாளிகை ஏறி
மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து
காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்
நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு
பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3)
184 தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)
185 புள்ளினை வாய் பிளந்திட்டாய்
பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு
காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த
செங்கழுநீர் சூட்ட வாராய் (5)
186 எருதுகளோடு பொருதி
ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)
187 குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை
மால்செய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே
குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7)
188 சீமாலிகன் அவனோடு
தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)
189 அண்டத்து அமரர்கள் சூழ
அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)
190 செண்பக மல்லிகையோடு
செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி
மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்
பட்டர்பிரான் சொன்ன பத்தே (10)
Негізгі бет Periyazhwar beckons Krishna
Пікірлер: 21