Ref: Bhagavad Gita As it is 1.41 (Purport by Srila Prabhupada)
பலன்நோக்குச் செயல்களின் சட்டதிட்டங்களின்படி,
குடும்பத்தின் முன்னோருக்கு உணவும் நீரும் அளிக்கும் கருமத்தைச் செய்ய வேண்டும்.
இந்தச் சடங்கு விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நடத்தப்படுவதாகும். ஏனெனில், விஷ்ணுவின் பிரசாதத்தை உண்பது ஒருவனை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடியது.
சில வேளைகளில் முன்னோர்கள் பல பாவச் செயல்களின் விளைவுகளால் துயரப்பட்டுக் கொண்டிருக்கலாம், சிலா் ஸ்தூல உடலை அடைய முடியாமல், தங்களது சூட்சும உடலிலே பேய்களாக அலைந்து கொண்டிருக்கலாம். வாரிசுகளின் மூலம் முன்னோர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படும்போது, அவா்கள் பல்வேறு விதமான துன்ப வாழ்விலிருந்தும் பேய் போன்ற நிலைகளிலிருந்தும் விடுபடுகின்றனா்.
இவ்வாறு முன்னோருக்கு உதவுதல், குலப் பண்பாடாகும்.
பக்தித் தொண்டில் ஈடுபடாதவா்கள், இது போன்ற சடங்குகளைச் செய்தாக வேண்டும். பக்தித் தொண்டைப் பின்பற்றி வாழ்பவா்கள் இத்தகு செயல்களைச் செய்ய வேண்டியதில்லை. பக்தித் தொண்டை எளிமையாக நிறைவேற்றுவதன் மூலமே, பல்லாயிரக்கணக்கான முன்னோரை எல்லாத் துன்பங்களிலிருந்தும் ஒருவனால் விடுவிக்க முடியும். பாகவதத்தில் (11.5.41) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
தேவா்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸா்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கா்தம்
”எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாதகமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவா், தேவா்களுக்கோ முனிவா்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினா்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன்படுவதில்லை.” புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், இதுபோன்ற கடமைகள் அனைத்தும் தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன.
-பகவத்கீதை உண்யுைருவில் 1.41
(ஸ்ரீல பிரபுபாதா பொருளுரை)
🙏🏻ஹரே கிருஷ்ணா.
🌸 ‘பக்தி ரத்னம்’🌸
இதில் பகவத்கீதை, பாகவத மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள்
இடம் பெறும்.
Bhakthi Rathnam
Tamil Devotional Lecture Videos
- ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.
Phone / Whatsapp: 721 721 6001
📿 அதிகாலை ஹரே கிருஷ்ண ஜபம்: தினசரி காலை 5.30 to 6.30
📖 பக்திரத்னம் வார வகுப்பு: வியாழன் இரவு 8.00 to 9.00
✍️*குறிப்பு:* இஸ்கான் வாட்ஸ் ஆப் 721 721 6001 நம்பரை எப்போதும் போன் Contact-ல் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தகவல்கள் தானாக நின்று விடும்.
- ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.
Негізгі бет பித்ருக்களுக்கு பிரசாதம் அளிப்பது எப்படி? - Karuna Sindhu Krishna Das
Пікірлер: 8