#ஒப்பாரிபாடல்
#marian
#derickstudios
#drxavier
#markantony
guitar Sagayam
rethym manoj
1
ஆதிபரன் சுதனே
ஆதிபரன் சுதன் கல்வாரி போயினையோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
2
மேதினியின் மகனே
நீதிபகர்ந்திங்கு ஜீவன் கொடுத்தனையோ
யாருள்ளம் தாங்கிடுமோ
3
மா பிதா மகனே
வழியுரைத்ததால் பழிசுமந்தனையோ
நீதியும் தாங்கிடுமோ
4
தாயவள் சுதனே
மேனிமுழுவதும் காயம்சுமந்தனையோ
காலமும் தாங்கிடுமோ
5
தூயவனே மகனே
ஆணிதுளைத்துனை காயம் அளித்தனவோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
6
மாபரனே மகனே
அரன்சுதனுனை சதியும் சாய்த்ததுவோ
பூமியும் தாங்கிடுமோ
7
வானவனே மகனே
ஈரவிலாவினில் ஈட்டியும் பாய்ந்ததுவோ
கல்வாரி தாங்கிடுமோ
8
ஆயனாய் வந்தவனே
ஆட்டினைப் போலவே அடிக்கப் பட்டனையோ
ஆயுளும் தாங்கிடுமோ
9
புதுமை நாயகனே
வஞ்சனை நெஞ்சினால் வஞ்சிக்கப் பட்டனையோ
நெஞ்சமும் தாங்கிடுமோ
10
தோழனாய் வந்தவனே
நண்பனுக்கய் ஜீவன் நல்கியே சென்றனையோ
தோழமை தாங்கிடுமோ
11
மாமகனே நரனே
நானிலத்துராசா நகைப்பை வாங்கினையோ
உயிரும் தாங்கிடுமோ
12
தூதரும் சொன்னவனே
மாபெரும் சிலுவை உவந்தே தாங்கினையோ
தோள்களும் தாங்கிடுமோ
13
மாறாத பூரணனே
மாய்மாலக் காரரின் சதியில் வீழ்ந்தனையோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
14
மார்க்கத்தின் நாயகனே
தீர்க்கர் உரைத்ததை மூர்க்கர் நினைத்தனரோ
வானமும் தாங்கிடுமோ
15
கடமையின் நாயகனே
கயமையின் அவையிலே நேயம் தொலைத்தனரே
தாயுள்ளம் தாங்கிடுமோ
16
சிலுவை நாயகனே
தீதினில் புரண்ட தீயரைத் தீர்பதன்றோ
தூயனைத் தாங்கியதோ
17
குறையற்ற தூயவனே
கறைகொண்ட பாவியர் கசைகொண்டடித்தனரோ
மேனியும் தாங்கியதோ
18
பாவிக்காய் வந்தவனே
ஆவியை தருவின் மேனியில் விட்டனையோ
பூமியும் தாங்கிடுமோ
19
தாவீதின் புத்திரனே
யூதனின் ராசனை வேதனை தாக்கியதோ
சுற்றமும் தாங்கிடுமோ
20
தேவனின் புத்திரனே
திருடர் மத்தியில் ஜீவனை விட்டனையோ
கண்களும் தாங்கிடுமோ
21
அன்பனே என்மகனே
கபாலத் தலத்தில் அபாயம் நேர்ந்ததுவோ
காண்பவர் தாங்குவரோ
22
கந்தையில் வந்தவனே
உடுத்த ஆடையை உரிந்தே சென்றனரோ
மானுடம் தாங்கிடுமோ
23
பாலனாய் வந்தவனே
வானமும் வந்திங்கு ஓலமும் இட்டதுவோ
பூலோகம் தாங்கிடுமோ
24
மெய்யனே என் மகனே
பொய்யரின் கரத்தில் அய்யனே வீழ்ந்தனையோ
என்னுள்ளம் தாங்கிடுமோ
25
மாதவனே மகனே
பாதகர் கோபத்தால் மேதினி நீங்கினையோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
26
ஆதிபரன் சுதனே
பவித்ர குணத்தோன் மரித்தே போயினையோ
என்னுள்ளம் தாங்கிடுமோ
27
ஆதி மகத்துவனே
நாயகன் நன்மணி தருவில் மாண்டனையோ
உள்ளமும் தாங்கிடுமோ
28
நீதி பராபரனே
ஆதி பழுதினை நீக்கிட மாண்டனையோ
ஏழையர் தாங்குவரோ
29
வேத மகத்துவனே
பாதையைக் காட்டியே பாதியில் நீங்கினையோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
30
என்னரும் கண்மணியே
தோளினில் சாய்ந்தவன் வாளினை ஈந்தனையோ
நெஞ்சமும் தாங்கிடுமோ
31
சத்திய மாமணியே
மெய்ச்சுதன் உன்னையே பொய்யர்கள் கொய்தனரோ
ஜீவனும் தாங்கிடுமோ
32
அன்பனே மாமகனே
அநாதித் தேவனை அநாதை யாக்கினரோ
அன்னையும் தாங்கிடுமோ
33
ஜோதியாய் ஆனவனே
வாதையை நீக்கியோன் பாதையை மூடினரோ
சீடரும் தாங்குவரோ
34
ஞான வரத்தினனே
வானமகத்துவ தேவனை தீர்த்தனரோ
மங்கையர் தாங்குவரோ
35
தேவனவர் சுதனே
சாந்த குணத்தோனை சதியில் சாய்த்தனரோ
பிள்ளைகள் தாங்குவரோ
36
தூய நிறைஒளியே
கனிதருவினை தருவில் கொன்றனரோ
துயரும் நீங்கிடுமோ
37
மறையதன் வடிவே
தொழும் அடியினை கழுவில் கண்டனரோ
ஜீவனும் தாங்கிடுமோ
38
தவறறு நிறைவே
கருணை நதியின் பெருமை கண்டிலரோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
39
வாக்கெனும் பூரணனே
போதகன் உன்னையும் பாதகர் கொன்றனரோ
மானுடம் தாங்கிடுமோ
40
பூரண சர்க்குணனே
தன்னிகரற்றோனை கண்ணியாய் கொன்றனரோ
என்னுள்ளம் தாங்கிடுமோ
41
பேறு தரும் சுதனே
சத்திய வாசகன் சிரத்தில் முள்முடியோ
வலியும் தாக்கியதோ
42
ஆசை அருளாளனே
மேசியா நேசையா உனையே கொன்றனரோ
உள்ளமும் தாங்கிடுமோ
43
ஒப்பில்லா என்மகனே
ஊழிக்காலத்தோனை அழித்தே நின்றனரோ
தாயுள்ளம் தாங்கிடுமோ
Негізгі бет புனித வெள்ளி அன்று பாடுகின்ற ஒப்பாரி பாடல்|MARIAN|MARK ANTONY|DR.XAVIER|
Пікірлер: 29