பரபரப்பான சூழ்நிலையில் போதகர் ரூஃபஸ் அவர்கள் தனது தந்தையாரின் ஸ்தானத்தில் போதகராகப் பொறுப்பேற்றார். நிகழ்ச்சியில் கூட்டமே இல்லை, இரகசியமாக நடைபெற்றது, பொருத்தமில்லாத முதிர்ச்சியற்ற அனுபவமில்லாத தலைவர் சிறுபிள்ளை தகப்பனை விசாரிக்காதவர் பொறுப்பில்லாதவர் தகப்பனை மனம் நோகச் செய்தவர் என்றெல்லாம் ஜேசுதாஸ் & சத்தியசீலன் சார்ந்த ஒரு பிரிவினர் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் உண்மைக்கு மாறான பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டிருக்க அதன் உச்சக்கட்டமாக கடந்த 24 ஏப்ரல் அன்றைய ஆராதனையை நடத்தவிடாமல் சபையாரைத் தூண்டிவிட்டு கலகம் செய்யப்பட்டது. எப்படியாகிலும் முறைகேடான விதத்தில் ஏஜி ஸ்தாபனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக சபையைக் கைப்பற்றிவிடலாமென ஒரு கும்பல் சதிகள் பல செய்தது. ஆனாலும் இறுதியில் நியாயமே வெல்லும் என்ற நியதியின்படி சட்டப்பூர்வ அனுமதி பெற்று சபையின் சாவி காவல்துறையினரின் துணையோடு பெறப்பட்டு மே மாதத்தின் முதலாம் தேதி அதிகாலை 5 மணி ஆராதனையில் மிகமிக எளிமையான முறையில் இளம் போதகர் ரூஃபஸ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாடி லாங்வேஜ் / Body Language எனப்படும் உடல்மொழியை உற்று கவனித்தால் மூத்த போதகர்கள் சம்பத் மற்றும் ராஜசேகர் உள்ளிட்ட அனைவரது முகங்களும் பதட்டம் நிறைந்தே காணப்பட்டது. இத்தகைய சூழல் ஆரோக்கியமான கிறிஸ்தவத்திற்கு அடையாளமல்லவே. கலகக்காரர்கள் இத்தனை கொடூரமானவர்களாய் இருப்பார்கள் என்று யாருமே நினைக்கவில்லை. இதன் பின்னால் பல்வேறு முறைகேடுகள் பயங்கரங்கள் இருக்குமென்று நினைக்கத் தோன்றுகிறது. போதகரின் சொல்லை மீறாதவர்கள் போதகர் சொன்ன எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டார்களோ என்று ஒரு நிமிடமாகிலும் யோசிக்கவேண்டும்.
ஒரு தகப்பன் தன் பிள்ளையைத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவது முதலாக நடைபழக்கி பள்ளிக் காலமெல்லாம் தோள்களிலும் நெஞ்சிலும் தூக்கி சுமந்து அவனுடைய சிறப்பான வாழ்க்கையைப் பார்த்து பெருமிதம் கொள்வானே அதுதான் ஒரு ஆண்மகனின் உயர்குணமாகும். அதையே தன் மகனுக்கு செய்வதற்கு மனதில்லாத அல்லது ஏதோவொரு மர்மசக்தி அவரை திசைதிருப்பி தடுத்து மிரட்டி கைப்பாவையாக வைத்திருந்து கடந்த சுமார் 8 வருடங்களாக ஆட்டம் போட்டிருக்கிறது. அவருக்கு உதவி என்று வந்தவர்கள் கொஞ்சமாவது ஈரமனம் உடையவர்களாய் இருந்திருந்தால் பாஸ்டர் ஐயாவை சமாதானப்படுத்தி குடும்பத்தாரோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும். அதுதான் முடியவில்லை, அவருடைய மரணத்திற்குப் பிறகாகிலும் அத்தனை பெரிய தலைவர்கள் ஏறக்குறைய சென்னை நகரத்தின் முக்கியத் தலைவர்கள் அத்தனை பேரும் மன்றாடி கேட்டபோதாகிலும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சபையில் குழப்பம் நேராதவண்ணம் ஆவன செய்திருக்கவேண்டும். தற்போது ஒரு இளம்போதகர் தனது தந்தையின் மறைவையும் தாங்கிக் கொண்டு அத்தனை பெரிய சபையின் பொறுப்பையும் பெரும் சவால்களுக்கிடையே ஏற்றிருக்கிறார். அவருக்கு உரிமையானதில் அவர் நிற்பதற்கே அத்தனையாய் சங்கடத்துடன் நெளியும்படி வைத்துவிட்டார்கள். தகப்பனானவன் தன் காலத்திலேயே அழகாய் செய்து அழகு பார்த்திருக்க வேண்டிய புண்ணியக் காரியமே இது.
இனி போதகர் ரூஃபஸ் அவர்கள் தனது தலைமைத்துவப் பண்புகளால் அவரை தவறாய் கணித்தவர்களையும் கவருமாறு செயல்படவேண்டும். அவருடைய போதனையும் சரி நடத்திப்பும் சரி தன் தகப்பனையே முழுக்க முழுக்க தழுவி இருக்காது என்பது தெரிந்ததே என்றாலும் அவை நன்மரபுகளைவிட்டு விலகாதிருக்கவேண்டும். மாறிவரும் உபதேசக் காரியங்களில் போதகர் ரூஃபஸ் தன்னை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு ஆதி அப்போஸ்தல உபதேசத்தையே முன்னெடுக்க வேண்டும். பவுலடிகள் தீமோத்தேயுவுக்கு சொல்லிச் சென்ற அதே வாக்கியத்தை நம் அருமை இளம் போதகருக்காக நினைப்பூட்டி அவரை வாழ்த்துவோமாக.
II தீமோத்தேயு 2:7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
Негізгі бет RSAG Charles Aaron ஐயா மகன் Rufus Cliff Victor அடுத்த போதகராக முறைப்படி பொறுப்பேற்றார் | AG Churches
Пікірлер: 278