"சென்னியோங்கு" பதிகத்தில் இவர் பெருமானை நோக்கி,
"என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனியென் திருக்குறிப்பே" (5,4,1) என்றும்
"பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவியென்னும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால்" (5.4.2) என்றும் அருளிச் செய்துள்ளார்.
பாசுர விளக்கம்: “சென்னியோங்கு தண்திருவேங்கடம் உடையாய்" என்று தொடங்கி இந்தப் பதிகத்தை அருளி, திருவேங்கடவனிடம் சரணாகதி அனுட்டித்துள்ளார் பெரியாழ்வார்.. திருவேங்கடவனே! நீ எனக்கு ஞானத்தை அருளினாய். அதனால்,, நானும் என் ஆன்மாவும் உனக்கே அடிமையாக ஆனோம். இதற்கு அடையாளமாக, , உனது சின்னங்களான சங்கத்தையும் சக்கரத்தையும் என் தோள்களில் பொரித்துக்கொண்டுவிட்டென். இதனால், என் கைங்கர்யங்கள் அனைத்தும் உனக்கே என்று இருக்கும். கருடனை வாகனமாகக் கொண்டு அடியவர்களை இரட்சிக்கும் புருஷனே! என்னை உன் கைங்கர்யங்களுக்கு என்று ஆட்கொண்டபின், என் பாவங்கள் அனைத்தும் தொலைந்தது. இதனால், நான் இதுநாள் வரை ஜென்மம் ஜென்மமாக பிறந்து கொண்டிருக்கும் சாபமும் நீங்கியது பிறவித்துயர் என்னும் கடல் வற்றியதால், பிறவியில்லாப் பேரின்பத்தை அடைந்துவிட்டேன் என்று ஆனந்தப்படுகிறார்
ஶ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Негізгі бет Senniyongu - சென்னியோங்கு ஶ்ரீ பெரியாழ்வார் திருமொழி
Пікірлер: 11